Sunday, June 12, 2016

நன்னம்பிக்கை முனை cape of good hope



 1488 இல் ஆப்பிரிக்காவை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த பார்த்தலோமியோ டயஸ் என்ற போர்த்துக்கீச மாலுமி தனது கடல் பயணத்தில் ஒரு முனையில் புயலில் சிக்கியதால் அவரது இலக்கைத் தொடர முடியவில்லை. இதனால் அந்த இடத்துக்குப் "புயல் முனை' என்று பெயரிட்டனர். இந்தியாவை நோக்கிய பயணத்தை மேற்கொண்ட வாஸ்கொடகாமாவுக்கு இந்தப் 'புயல் முனை' தனது இலக்கை அடைவதற்கான புதிய நம்பிக்கையை கொடுத்ததன் காரணமாக இதற்கு நன்னம்பிக்கை முனை எனப் பெயரிட்டனர். அது இன்றும் அவ்வாறே அழைக்கப்படுகிறது.
நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) என்பது தென்னாபிரிக்காவின் தெற்குக் கரையோரமாகவுள்ள ஒரு கற்பாறைக் குடா (headland) ஆகும். 1488 இல் தூர கிழக்கு நாடுகளுடன் வணிகத் தொடர்புகளை வைத்திருப்பதற்கு இம்முனையைச் சுற்றி வருவது போர்த்துக்கீச மாலுமிகளுக்கு ஒரு தவிர்க்க முடியாத மைல்கல்லாக் இருந்தது. தெற்கு அத்திலாந்திக் பெருங்கடலின் ஒரு பெரும் முனையாக இது கருதப்படுகிறது


நன்னம்பிக்கை முனை (1888 வரைபடம்) நன்னம்பிக்கை முனையில் 1855 இல் வெளியிடப்பட்ட ஒரு முக்கோண அஞ்சற்தலை நன்னம்பிக்கை முனை (Cape of Good Hope) என்பது தென்னாபிரிக்காவின் தெற்குக் கரையோரமாகவுள்ள ஒரு கற்பாறைக் குடா (headland) ஆகும். 1488 இல் தூர கிழக்கு நாடுகளுடன் வணிகத் தொடர்புகளை வைத்திருப்பதற்கு இம்முனையைச் சுற்றி வருவது போர்த்துக்கீச மாலுமிகளுக்கு ஒரு தவிர்க்க முடியாத மைல்கல்லாக் இருந்தது. தெற்கு அத்திலாந்திக் பெருங்கடலின் ஒரு பெரும் முனையாக இது கருதப்படுகிறது.

{ஐரோப்பா|ஐரோப்பியர்]]கள் இங்கு வருவதற்கு முன்னரே சீன, அராபிய, மற்றும் இந்திய மாலுமிகள் இம்முனைக்கு வந்து போயுள்ளதாகக் கருதப்படுகிறது. 1488 ஆம் ஆண்டுக்கு முன்னர் வரையப்பட உலகப் படங்கள் இதற்கு சான்றாகும்.

1488 இல் ஆப்பிரிக்காவை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்த பார்த்தலோமியோ டயஸ் என்ற போர்த்துக்கீச மாலுமி தனது கடல் பயணத்தில் ஒரு முனையில் புயலில் சிக்கியதால் அவரது இலக்கைத் தொடர முடியவில்லை. இதனால் அந்த இடத்துக்குப் "புயல் முனை' என்று பெயரிட்டனர். இந்தியாவை நோக்கிய பயணத்தை மேற்கொண்ட வாஸ்கொடகாமாவுக்கு இந்தப் 'புயல் முனை' தனது இலக்கை அடைவதற்கான புதிய நம்பிக்கையை கொடுத்ததன் காரணமாக இதற்கு நன்னம்பிக்கை முனை எனப் பெயரிட்டனர். அது இன்றும் அவ்வாறே அழைக்கப்படுகிறது.

நன்றி  இணையம்

Thursday, June 09, 2016

350 மில்லியன் வருடங்களாக மறைந்து வாழ்ந்த உயிரினம் பிடிக்கப்பட்டது

கடலடியில் படத்தில் காட்டப்படும் புதியவகை மீன் இனம் இணங்காணப்பட்டது. சுமார் 2000-6500 அடி ஆழத்திற்கு இடப்பட்ட நிலையில் வாழும் மீன்கள் இவை என்பதால் இவற்றைப்பற்றி இதுவரை மனிதர்களுக்கு தெரியாதிருந்துள்ளது.


Knifenose Chimaera
ஆர்ட்டிக் சமுத்திரத்தில் படகொண்டில் மாட்டிக்கொண்ட இந்த மீனை ஆராய்ந்ததில் இவை சுமார் 350 மில்லியன் வருடங்களாக பூமியில் வாழ்வதாக ஊகிக்கப்படுகிறது.
(பூமியின் வயது 454 மில்லியன் வருடங்கள் என கணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.)
முதலில் “goblin shark -(கொப்லின் சுறா)” வகையின் ஒரு பிரிவு என கருதப்பட்டது. எனினும் மரபணு ஆய்வில், இது ஒரு புதுவகை மீன் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Goblin shark
கத்தி போன்ற கூரிய மூக்கை உடையவை இவை என்பதால் “Knifenose Chimaera” என பெயரிடப்பட்டுள்ளது.
இது Rhinochimaeridae எனும் வகையைச்சேர்ந்ததாக கருதுகிறார்கள். Rhinochimaeridae எனும் சொல், கிரேக்க மொழியில் “மூக்கு” மற்றும் “அரக்கன்” அனும் அர்த்தத்தை ஒன்றினைக்கும் சொல்லாகும்!
உலகின் அனைத்து சமுத்திரத்திலும் 2000-6500 அடி வரைக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த இன மீன்கள் பல இருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றார்கள்.