Friday, December 28, 2012

சிவப்பு மழை,மீன் மழை,மஞ்சள் மழை ,முதலை மழை

சிவப்பு மழை
சிவப்பு மழை அல்லது குருதி மழை எனப்படுவது ஓர் அரிதான சிவப்பு அல்லது கபில நிறத்தில் பெய்யும் மழையாகும். இது பல வகைப்பட்ட இலக்கியங்களில் ஒரு துக்க சம்பவத்தின் அறிகுறியாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ எடுத்தாளப்பட்டுள்ளது. எனினும் இது சாதாரண இயற்கை நிகழ்வாகும்.


இது மழையுடன் கலந்த தூசால் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. கடுமையான காற்றுடன் கலந்திருக்கும் தூசானது நீராவி முகில்களாக ஒடுங்கி மழையாகப் பொழியும் போது சிவப்பு மழையாகப் பொழிவதாகக் கருதப்படுகின்றது.

மழையில் கலந்திருக்கும் ஒரு வகை சிவப்பு அல்காவால் செம்மழை பொழிவதாக இலங்கையில் பொழிந்த சிவப்பு மழைக்கான விளக்கங்கள் கூறுகின்றன.

இதேவேளை அண்மையில் செவனகல மன்னம்பிட்டிய ஹிக்குராங்கொட மற்றும் பதியதலாவ பகுதிகளில் பெய்த சிவப்பு மழையில் இலங்கையில் இதுவரை இனங்காணப்படாத உயிரின வகையொன்று இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




இலங்கையின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக 'சிவப்பு நிற' மழை பெய்து வருகிறது.  இலங்கையின் செவனகல பிரதேசத்தில் சிவப்பு மழை பெய்திருக்கிறது. இதேபோல் இந்திகொலபெலஸ்ல ஆகிய கிராமங்களிலும் சிவப்பு மழை பெய்திருக்கிறது.

கடந்த வாரத்தில் இதேபோல பல பகுதிகளில் 'செம்மழை' பெய்திருக்கிறது. இந்த மழை நீர் பட்டிருக்கும் இடங்களில் சிவப்பு நிற திட்டுகள் காணப்படுகின்றன.

வீட்டின் கூரைகள் மரங்களின் இலைகளில் பொதுமக்களின் உடைகளிலும் இந்த செந்நிறத் திட்டு படிந்திருப்பதால் 'ரத்தக் கறை' போல் காணப்படுகிறது. 

இவ்வாறான நிகழ்வு இலங்கை மக்களுக்கு புதிதாக இருந்தாலும்  இது போன்ற நிகழ்வுகள் ஏற்கனவெ வெளிநாடுகளில் நிகழ்ந்திருக்கின்றன. கடந்த 2005ல் கேரளாவில் இத பொன்ற ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.



ட்ராகோலேமொனாஸ்' எனப்படும் நுண்ணுயிரே குறித்த மாதிரிகளில் இருந்ததாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
இச் செம்மழையில் நனைந்தால் அது பொதுமக்களுக்கு தீங்கை உண்டாக்காத நுண்ணுயிர் என்று அறியப்பட்டதாக மருத்துவ ஆராய்ச்சி நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேற்று கிரகங்களில் இருந்து வந்தவர்களால் சிவப்பு மழை தோன்றியிருக்கலாம் என்று முன்னர் பரவலாக கருத்துகள் வெளியிடப்பட்டு வந்தன.
எனினும்இ அவற்றில் எந்தவித உண்மையும் இல்லை என்று ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கிரக மண்டல ஆய்வாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவிக்கையில்.
இலங்கைக்கு இவ்வாறான சிவப்பு மழை புதிது எனினும் ஏனைய நாடுகளில் இவ்வாறான சிவப்பு நிற மழை வீழ்ச்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் பெய்திருப்பதாகவும்இ கடலில் இருந்து ஆகாயத்துக்கு நீர் உறிஞ்சப்படும் போது சில சமயங்களில் கடலில் காணப்படுகின்ற அரிதான சிவப்பு நிற மாற்றங்களும் சேர்த்து உறிஞ்சப்படலாம்.

இதன் விளைவாகவே இந்த மழைவீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

மீன்மழை

பொதுவாக நாம் வாழும் பகுதியில் எப்போதாவது அதிசயமாக ஆலங்கட்டி மழை பெய்வதாக சிலர் கருதுவதுண்டு. ஆனால் வெளிநாடுகளில் சில சமயங்களில் மீன்மழையும் பொழிகிறது. இம்மீன் மழைகள் சுழல் காற்றினால் ஒரு சிறிய நீர்நிலையே அதனுள் இருக்கும் மீன்கள், முதலைகள், தவளைகள் மற்றும் சிறு உயிரினங்களோடு உறிஞ்சப்பட்டு காற்றில் எடுத்துச்செல்லப்பட்டு வேறொரு இடத்தில் கொட்டப்படுவதே மீன்மழைக்கான காரணம். அவ்வாறு காணப்படும் அழகான மீன்மழையினைக் காணொளியில் காணலாம்.






மஞ்சள் மழை

அட்டன் - குடாஓயா பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை மஞ்சள் மழை பெய்துள்ளது.

மஞ்சள் மழை பெய்வதை அவதானித்த மக்கள் உடனடியாக அதனை சேகரித்துள்ளனர். சுமார் இரண்டு மணிநேரம் இந்த மஞ்சள் மழை பெய்துள்ளதுடன் மக்கள் அதிசயத்துடன் அதை அவதானித்துள்ளனர்.

முதலை மழை

தற்போது மாத்தறை சுல்தானாகொட கெகில்ல பிரதேசத்தில் பாரிய மழையுடன் முதலைக் குட்டியொன்று வீழ்ந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
கே. பியதிஸ்ஸ என்வரின் வீட்டுக் கிணற்றிற்கு அருகாமையில் இந்த முதலைக் குட்டி வீழ்ந்துள்ளது.
இந்தக் கிராமத்திற்கு அருகாமையில் முதலைகள் வாழும் எந்தவொரு குளமோ அல்லது வேறும் நீர் நிலைகளோ கிடையாது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கிராமத்திற்கு இதற்கு முன்னர் முதலைகள் வந்தததில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

நன்றி இணையம்


Tuesday, September 25, 2012

மிக அரிதாகவே ஏற்படும் தீ பிசாசு


ஆஸ்திரேலியா, அலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் (திங்கட்கிழமை 18/09/2012) தோன்றிய fire tornado இது. மிக அரிதாகவே ஏற்படும் இதை தீ பிசாசு (fire devil) என்றும் அழைப்பார்கள். நேற்று இதை நேரில் கண்டவர்கள், “போர் விமானம் ஒன்று எழுப்பும் ஒலி போல கேட்டது. திடீரென வானத்துக்கும் பூமிக்குமான நெருப்பு கீற்று உருவானது” என்கிறார்கள்.
இரண்டு அல்லது மூன்று நிமிடத்துக்கு மேல் fire tornado நீடிக்கவில்லை. அதற்குள் கிளிக் செய்யப்பட்ட போட்டோ இது.

மிகப் பெரிய நெருப்பு சுழல் காற்று வடிவை அடைதல் எரி சுழல் காற்று (Fire whirl அல்லது fire tornado) எனப்படும். இது பொதுவாக காட்டுத்தீகளின் போது உருவாகும். அதிக வெப்பத்தின் காரணமாக காற்று மேலெளும்பலாலேயே இவ்வாறு உருவாகிறது. 1923ல் ஜப்பான் மற்றும் 2012ல் ஹவாய் ஆகிய இடங்களில் எரிசுழல் காற்று உருவாகியுள்ளது.

ஐரோப்பாவில் அதிஉயர்ந்த பெறுமதியைக் கொண்ட, நினைவுச் சின்னம்

 ஐரோப்பிய நாடான பிரான்ஸூக்கு தனித்துவமான ஒன்றாக இருப்பதோடு, அதற்கு வருமானத்தையுயும் ஈட்டித் தருவதுதான் ஈபெல் கோபுரம். இத்தாலியிலுள்ள ஒரு நிறுவனத்தின் கணிப்பின்படி, ஐரோப்பாவில் அதிஉயர்ந்த பெறுமதியைக் கொண்ட, நினைவுச் சின்னம் இந்த ஈபிள் கோபுரந்தான் என்று அறிவித்திருக்கின்றார்கள். தமது மண்ணிலுள்ள கொலோசியத்திற்கு மூன்றாவது இடத்தையே கொடுத்திருக்கின்றார்கள்.
ஒவ்வொரு வருடமும் இந்த ஈபெல்  கோபுரத்தை ஆவலுடன் சென்று பார்ப்பவர்கள் தொகை எவ்வளவாக இருக்கலாம் என்று நினைக்கின்றீர்கள்? பாரிஸ் நகரம் நினைத்து நினைத்துக் கர்வம் கொள்ளும் வகையில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் ஈபெல் கோபுரத்தை நேரில் காண, ஒரு வருடத்தில் 8 மில்லியன் உல்லாசப் பயணிகள் வந்து போகின்றார்கள் என்கின்றது ஒரு கணக்கு! அப்பப்பா ஜனக்கூட்டம் மொய்க்கின்றது என்றே சொல்ல வேண்டும்! பிரான்ஸ் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பலம் சேர்க்கும் இந்தக் கோபுரத்தின் மதிப்பை 334 பில்லியன் என்று இத்தாலிய நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
இந்தக்  320 மீற்றர் உயரமான கோபுரத்தோடு போட்டியிடும் ரோமானியரின் காலத்தால் அழியாத அற்புதமான கொலோசியம் இதன் பெறுமதியில், ஐந்து மடங்கால் குறைந்து நிற்கின்றது என்று சொல்லும்போது, ஈபெல் கோபுரம் எந்த அளவுக்கு உயர்ந்து நிற்கின்றது என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சரி எதனை மனதில் வைத்துக் கொண்டு இந்த மதிப்புக் கணிப்பீட்டைச் செய்தார்கள்? இந்த நாட்டின் அற்புதமான சின்னங்கள் எந்த அளவுக்கு மற்றையோரைக் கவர்கின்றன, இது எந்த அளவுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றது போன்றவற்றையெல்லாம் மனிதில் வைத்துக் கொண்டுதான் கணிப்பீடு இடம்பெற்றிருக்கின்றது. அப்படிப் பார்க்கும்போது, இந்த அடையாளச் சின்னங்கள் இல்லையென்றால், அந்தந்த நாடுகளுக்குப் பேரிழப்புத்தான்  என்பது தெரிகின்றது.
1889இல்தான்  பிரெஞ் புரட்சியின் ஞாபகார்த்தமாகவே இந்தக் கோபுரம் எழுப்பப்பட்டது. இந்தக் கோபுரத்தை வடிவமைத்தவர் பொறியியலாளர் Gustave Eiffel இன் நிறுவனம் என்பதால் அவர் பெயரால் இக் கோபுரம் அழைக்கப்பட்டு வருகின்றது. 1930இல் நியூ யோர்க் நகரின் Chrysler கட்டடம் எழுப்பப்படும் வரை, ஈபெல் கோபுரமே, உலகின் மிக உயர்ந்த கோபுரமாக இருந்து வந்திருக்கின்றது.
இங்கே ஒரு வேடிக்கையான விடயத்தைச் சொல்லியாக வேண்டும். இந்தக் கோபுரம் 20 வருடங்களுக்கு அழியாது நிலைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் எழுப்பப்பட்டதாம். ஆனால் இதுவே ஏறத்தாழ 120 வருடங்களாக கம்பீரமாக நிமிர்ந்து நிற்கின்றது என்பது நம்ப முடியாதது ஆனால் நிஜமான சங்கதி! உலகிலேயே மிக அதிகமான தொகையினரால் பார்க்கப்படும் உலோகத்தாலான ஒரு நாட்டின் அடையாளச் சின்னமாக உலகில் இந்தக் கோபுரமே நிமிர்ந்து நிற்கின்றது.
300வேறு வேறு உலக நாடுகளின் முத்திரைச் சின்னங்கள், ஒன்றோடு ஒன்று போட்டிபோட்டுள்ளன. இந்தப் பெரிய தொகையில் ஈபெல் கோபுரம் முதலிடத்தைப் பிடித்தது என்பது பெரியெதாரு சாதனைதான். இந்த முடிவை சில இத்தாலிய பத்திரிகைகள் வரவேற்கவில்லை. விமர்சித்திருக்கின்றன என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும. 1944இல் ஹிட்லர் ஆக்ரமிப்பின்போது, இக் கோபரம் அழிக்கப்படாமல்  தப்பியது நமது பெரிய அதிஸ்டந்தான்!. பிரான்சிலுள்ள முக்கிய அடையாளச் சின்னங்களையெல்லாம் அழித்து விடுங்கள் என்று ஹிட்லர் கொடுத்த கட்டளை அதிகாரிகளால் அப்பொழுது நிறைவேற்றப்படாததால்தான், இன்றும் இந்தக் கோபுரம் நம்மிடையே உயர்ந்து நிற்கின்றது. எதிரிகளின் வருகையை கோபுரத்திலிருந்து வசதியாகப் பார்க்க முடியும் என்பதும் அழிவிலிருந்து மீண்டதற்கு இன்னொரு காரணம்!
உல்லாசப் பயணிகள் இந்தக் கோபுரத்தை 7 வருடத்திற்கு ஒரு தடவை பெயின்ட் அடித்து வருகின்றார்கள். இந்த வேலையை முழுமையாக முடிக்க 6 தொன் எடையுள்ள பெயின்ட் தேவைப்படுகின்றது. கோபுரம் துருப்பிடிக்காமல் இருக்கவே இந்த முன் ஏற்பாடு! இந்தக் கோபுரத்தில் ஏறுவதானால் மூன்று நிலைகள் உண்டு. தெற்காக உள்ள தளத்தில் ஆரம்பிக்கும் முதலாவது இரண்டாவது நிலைகளுக்கு படிகள் மூலம் ஏறிச் சென்று விடலாம். மூன்றாவது நிலைக்குச் செல்வதானால் லிப்ட் உபயோகித்தாக வேண்டும். லிப்டில் இருந்து வெளியேறியதும், 15 படிகள் ஏறினால்தான், உச்சியில் நின்று நகரைப் பார்க்கும் நிலையத்தை எட்ட வசதியளிக்கும்.
இன்னொரு சுவையான சம்பவத்தையும் இங்கே முடிவில் சொல்லிவிடலாம். 20 வருடததிற்கான கட்டடம் என்று முடிவெடுக்கப்பட்டு அ10ரம்பத்தில் இதற்கு பாரிஸ் நகர அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்டிருந்ததால், 20 வருட முடிவில் இக் கட்டடத்தை அடியோடு அழிப்பதற்கான உத்தரவு அதிகாரிகளால் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் தொடர்பு வசதிகளுக்கு ஏற்றதாக இக் கோபுரம் இருந்தமையால், அழிக்கக் கொடுக்க உத்தரவு நிறைவேற்றப்படவில்லை.
1000 வருடங்கள் தொன்மையான இலண்டன் கோபுரந்தான் பிரித்தானியாவின் அதிக மதிப்பு  வாய்ந்த அடையாளச் சின்னமாக இருக்கின்றது. இதன் மதிப்பை56 பில்லியன் பவுண்ட்ஸ் என்று மதிப்பிட்டுள்ளார்கள்.
பாரிஸ் நகர அதிகாரிகளிடமும் ஹிட்லரிடமும் இரண்டு தடவைகள் தப்பிப் பிழைத்து ஒரு நூற்றாண்டைக் கடந்து விட்ட இந்த அற்புத கோபுரம், முதலிடத்தைத் தட்டியிருப்பதில் அதிசயமில்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது.
அந்தந்த மதிப்புகளுக்கேற்ப கணித்த,  ஐரோப்பாவின் முதல் 7 அடையாளச் சின்னங்கள் இதோ!
1. Eiffel Tower, Paris: 344 billion pounds
2. The Colloseum, Rome: 72 billion pounds
3. The Sagrade Familia Cathedral, Barcelona: 71 billion pounds
4. The Duomo Cathedral, Milan: 65 billion pounds
5. The Tower of London: 56 billion pounds
6. The Prado Museum, Madrid: 46 billion pounds
7. Stonehenge, UK: 8.3 billion pounds


நன்றி இணையம் 

Friday, August 17, 2012

கோபமான மீன் sarcastic fringeheads

 மீன் வகைகளில் ஒன்றானதும் sarcastic fringeheads என்ற பெயரைக் கொண்டு காணப்படுகிறது. மிகவும் ஆழமான பகுதியில் காணப்படும் இந்த மீன் மிகவும் கோபம் கொண்டதாகும். இந்த மீனின் தாக்குதலுக்கு பயந்து ஓடும் அக்டோபஸைக் காணொளியில் காணலாம்.


sarcastic fringehead சாதாரணமான  ஒரு பெரிய வாய் மற்றும் ஆக்கிரமிப்பு பிராந்திய நடத்தை கொண்ட ஒரு மூர்க்கமான மீன். இரண்டு ஒரு பிராந்திய போர் போது, அவர்கள் ஒருவருக்கொருவர் எதிராக விரிவடைந்து வாய் அழுத்தி மல்யுத்தம்  செய்து ஆதிக்கத்தை நிறுவி அதில் பெரிய மீன் தான் என நிருபிக்கிறது.

  sarcastic fringehead   30 சென்டிமீட்டர் இருக்கும் பெரும் pectoral துடுப்புகள் மற்றும் குறைந்த இடுப்பு துடுப்புகள் பெரும்பாலும் scaleless உள்ளன.உயர் அமுக்கத்தை உடல்களில் தாங்கி கொள்ளக்கூடியதுமஇ விலாங்கு போன்ற தோற்றம் அளிக்க கூடியது ஆகும்

சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, மத்திய பாஜா கலிபோர்னியா, வட அமெரிக்கா கடற்கரையை, பசிபிக் போன்ற இடங்களில் காணப்படுகிறது.இந்த மீன் இனம் வரை 3 முதல் 73 மீட்டர் (9.8 முதல் 240 அடி) ஆழப்பகுதியில் காணப்படும்

நன்றி இணையம்

Monday, July 30, 2012

ஏரிகள் உருவான வரலாறு


பூமித்தாய் உருவாக்கிய அதிசயங்களில் ஏரிகளும் முக்கியமானவையே. தண்ணீர் பாய்ந்து வந்து நிறைகிற வெற்றிடமோ பள்ளமோ நாளடைவில் ஏரியாகி விடும். தண்ணீர் ஊறி மண் வழியே வெளியேறாத நிலமும் அணைக்கட்டுகளுக்குப் பின்னால் உள்ள இடங்களும்தான் ஏரிக்கு ஏற்றவை. பூமித்தட்டின் நடனமும் பனிக்கட்டி உருகுதலுமே பல ஏரிகள் ஏற்பட காரணம். படிப்படியாக பூமித்தட்டு மேலே எழும்போது அணைகள் போன்ற அமைப்புகளும் கன்னாபின்னா வென இயக்கம் ஏற்படும்போது அகன் ஆழமான ஏரிகளும் உருவாகின்றன. ஆப்ரிக்காவையும் ஆசியாவையும் வெட்டியதுபோல பிரிக்கும் ரிஃப்ட் பள்ளத்தாக்கு பல கன்னாபின்னா ஏரிகள் அமையக் காரணமாக இருந்தது. 

உதாரணம் சாக்கடல் என்றழைக்கப்படுகிற டெட் ஸீ, நயஸா ஏரி. உருகும் பனிக்கட்டிப்பாறைகள் தரையைத் தேய்த்து, சுத்தம் செய்து பள்ளங்களை உருவாக்குகின்றன. அதோடு அங்கே நிறைய வீழ்படிவுகளையும் கொண்டுவந்து சேர்த்து, ஒரு முகடு அல்லது வரப்பு போன்ற அமைப்பையும் ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் இயற்கை அணைக்கட்டுகள் உருவாகின்றன. வட அமெரிக்காவின் பிரமாண்ட ஏரிகளும், ஐரோப்பாவின் ஆல்பைன் ஏரிகளும் இப்படித் தோன்றியவையே. ஹைதராபாத் நகரத்தை அருமையான சுற்றுலாத்தலமாக மாற்றிய பெருமை ஹுசைன் சாகர் என்ற ஏரியைச் சேரும்.

நன்றி இணையம் 

Sunday, April 15, 2012

உலகின் முதலாவது எந்திர மீன்

ரோபாட் என்று அழைக்கப்படுகிற எந்திர மனிதனைப் பார்த்து நம்மில் பலரும் இன்னும் வியந்து கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் உலகின் முதலாவது எந்திர மீனை விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள்.


இத்தாலியை சேர்ந்த தேசிய ஆராய்ச்சிக் கழகம் மற்றும் நிïயார்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தான் இந்த ரோபாட் மீனை உருவாக்கி உள்ளனர். இந்த எந்திர மீனைக் கொண்டு மீன்களின் நடத்தை பற்றி ஆராய வழி பிறந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.


எந்திர மீனை தண்ணீரில் விட்டபோதுஇ அதன் வால் பகுதி உண்மையான மீனை விட வேகமாக அசைவதைக் கண்ட மீன்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்துள்ளன. சரக்கு கப்பல் விபத்துக்களால் கடலில் எண்ணெய் படலம் ஏற்படுகிறபோது கடல் வாழ் மீன்களுக்கு ஆபத்து நேரிடுகிறது. அத்தகைய தருணத்தில் கடல் வாழ் மீன்களை ஆபத்திலிருந்து விலகிச் செல்ல வழி நடத்துவதில் இந்த எந்திர மீன் உதவியாக இருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

நன்றி இணையம் 

இதன் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Friday, April 13, 2012

நிலநடுக்கம் பூகம்பம் அல்லது பூமி அதிர்ச்சி ரிச்டர் அளவுகோலில் ஏன் அளக்கப்படுகிறது?

அமெரிக்க நிலஅதிர்வுவியலாளர் ‘சார்லஸ் ரிச்டர்’ 1935ம் ஆண்டில் முதன்முதலாக நில அதிர்வுகளுக்கு நில அளவுகளை வரையறுத்தார். இது தரையில் ஏற்படும் நில அதிர்வின் அலை உயரத்தைக் கணிக்கும். இதன் ஒரு யூனிட் அதற்கு முந்தைய யூனிட் அளவை விட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும்.

நில அதிர்வுகள் ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான அளவிலிருந்து பல மீட்டர்கள் வரை மிக அதிக மாறுபாடுகளைக் கொண்டதாக இருப்பதால், அவர் அளவுகளை இவ்வாறு வரையருக்க வேண்டியிருந்தது. ஆகவே ரிச்டர் ஸ்கேலில் 5 என்ற அளவு நான்கை விட பத்து மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும். மூன்றை விட 10×10 அல்லது 100 மடங்கு அதிக அதிர்வுகளைக் கொண்டதாக இருக்கும்.

ரிச்டர் அளவில் 2.0க்கு குறைவானவற்றை சாதாரண மனிதர்களால் அறிய முடியாது. இவைகள் மைக்ரோ பூகம்பம் எனப்படும். இவை சர்வசாதாரணமாக தொடர்ந்து நடைபெறும். 6.0க்கு மேல் பதிவாகும் பூகம்பங்கள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ரிச்டர் அளவை உருவான பிறகு அதிகபட்சமாக 8.9 வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.


ஆனால் பூகம்பம் நிகழும் இடத்தைப் பொறுத்து ஒரே ரிச்டர் அளவைக்கு மாறுபட்ட பாதிப்புகள் ஏற்படலாம். மக்கள் நெருக்கியடித்து வாழும் நகரின் மையத்தில் நிகழும் பூகம்பம் அளவிட முடியாத நாசத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால் அதே அளவு பூகம்பம் ஒரு தட்டையான வனப்பிரதேசத்தில் ஏற்பட்டால் அங்குள்ள வனவிலங்குகளைச் சற்று சிதறி ஓடுவதைத் தவிர வேறு பாதிப்புகளை உண்டாக்காமலும் இருக்க முடியும்.

Saturday, March 24, 2012

உலக காச நோய் நாளும் மார்ச் 24ம் ராபர்ட் கோக்ன் கண்டுபிடிப்பும்

 மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அனைத்துலக காச நோய் நாள் (World Tuberculosis Day)மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

காச நோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னமும் கட்டுக்கடங்காமல் உள்ளது.

மார்ச் 24 1882 ஆம் ஆண்டில் டாக்டர் றொபேர்ட் கொக் (Robert Koch) என்பவர் காசநோய்க்கான காரணியை பெர்லினில் (TB bacillus) அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். ஆந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது. கொக்கின் இக்கண்டுபிடிப்பு காச நோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது.

1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு (International Union Against Tuberculosis and Lung Disease – IUATLD) மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு (WHO) இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.
 
 மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனைத்துலக காச நோய் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
 
காச‌ நோயை த‌விர்ப்போம்!

காச நோய் ஆண்டுதோறும் உலகில் 1.7 மில்லியன் மக்களை கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னமும் கட்டுக்கடங்காமல் உள்ளது.

மார்ச் 24, 1882 ஆம் ஆண்டில் டாக்டர் றொபேர்ட் கொக் என்பவர் காசநோய்க்கான காரணியை பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். அந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது. கொக்கின் இக்கண்டுபிடிப்பு காச நோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது.

1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் இருதய நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.

காச நோய் சுவாசத் தொகுதியைப் பாதிக்கும் ஒரு தொற்று நோயாகும். இது மைக்கோ பக்ரீறியம் ரியூபர்கியூலோசிஸ் என்ற நுண்ணங்கியால் நோய்த் தொற்றுள்ள ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு சுவாசச் சிறுதுணிக்கைகள் மூலம் பரவுகிறது,

காச நோயின் அறிகுறிகள

  • உடற் சோர்வு
  • உணவு விருப்பின்மை
  • நீடித்த காய்ச்சலும் இருமலும் மஞ்சட் சளி
  • நெஞ்சு நோவு
  • அடிக்கடி தடிமன்
சிலரில் இரவுநேர அதிக வியர்வை இருமலுடன் அதிகளவு குருதிசிகிச்சைஆறு மாத காலத்துக்குக் கட்டாய சிகிச்சை அத்தியாவசியம். தவறுமிடத்து எதிர்ப்பு சக்தியுடைய நோய்க்கிருமிகள் உருவாகி நோயைக் குணப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

காசநோய் தவிர்ப்பபிசிஜி தடுப்பூசி குழந்தை பிறந்து நான்கு கிழமைக்குள் கொடுக்கப்பட வேண்டும். இதன்போது தழும்பொன்று உருவாகும். இத்தழும்பு உண்டாகாதவிடத்து ஆறுமாதம் தொடக்கம் ஐந்து வயது காலத்திற்குள் இவ்வூசி மீண்டும் கொடுக்கப்பட வேண்டும்.

மூன்று கிழமைகளுக்கு மேல் இருமல் இருக்குமிடத்து உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறவும்

மக்கள் நெரிசலான இடங்கள், சூரிய வெளிச்சம் உள்வராத வீடுகள் இந்நோய் பரவுவதை ஊக்குவிப்பனவாகும்.

போஷாக்குக் குறைபாடு எளிதாக இந்நோய் தொற்ற வழிவகுக்கும்
பசும்பாலினால் பரவும் காசநோயைத் தவிர்க்க நன்கு கொதிக்க வைத்த பால் அல்லது பதனிட்ட பாலை அருந்தவும்.

காச நோய் மிக கொடுமையானது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் எப்போதும் வரலாம். மருத்துவர்களின் ஆலோசனைப்படி காச நோயாளிகள் தவறாமல் 6 மாதத்திற்கு மாத்திரைகள் சாப்பிட்டால் குணமாகிவிடும்.இந்தியாவில் மட்டும் காச நோயால் தினமும் 1000க்கும் மேற்பட்டவர்கள் இறக்கிறார்கள். காச நோய்க்கான அறிகுறிகளாக, தொடர்ந்து இருமல் இருப்பத, விட்டுவிட்டு காய்ச்சல் வருவது, உடல் மெலிவது, களைப்படைவது போன்றவையாகும். இப்படி ஒருவருக்கு இருந்தால் அவர் உடனடியாக சளி பரிசோதனை செய்ய வேண்டும்.காச நோய் ஒரு தொற்று வியாதி. எளிதில் பரவக்கூடியது. 

நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மல், இருமல் வரும்போதும், பேசும்போதும் கைக்குட்டையால் வாயை மூடிக் கொள்ள வேண்டும். அந்த துணியை தனியாக துவைத்து காய வைக்க வேண்டும். கண்ட கண்ட இடங்களில் துப்பக் கூடாது. குடும்பத்தில் ஒருவருக்கு காசநோய் ஏற்பட்டால், அவர் பாதுகாப்புடனும், எச்சரிக்கையாகவும் இருந்தால் மற்றவர்களுக்கு பரவலாமல் பாதுகாக்கலாம்.பெரும்பாலும் குழந்தைகளையே இந்த நோய் தாக்கும் வாய்ப்பு உள்ளது.

ராபர்ட் கோக் (Robert Koch டிசம்பர் 11 1843 – மே 27 1910) ஜெர்மானிய அறிவியலாளரும் மருத்துவரும் ஆவார். இவர் 1877 இல் பாசில்லஸ் ஆந்த்ராசிஸ் எனும் கோலுரு நுண்ணுயிர் 1882 இல் மைக்கோபாக்டீரியம் என்ற காச நோயை உருவாக்கும் நுண்ணுயிர் மற்றும் வைபிரியோ காலரா என்ற கொள்ளை நோயை உருவாக்கும் நுண்ணுயிர் ஆகியவற்றை வேறுபடுத்தியமைக்காகவும் கோக்கின் எடுகோள்களுக்காகவும் அறியப்படுகிறார்.

காச நோய் பற்றிய இவரது ஆய்வுக்காக 1905 இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது


நன்றி இணையம்


Wednesday, March 14, 2012

அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் பை நாளும் மார்ச் 14

பை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன \pi \, என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14ம் நாள் பை நாளாக கொள்ளப்படுகின்றது. . அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண் அதாவது 3.14 என்பது அண்ணளவாக  ஐயும் குறிக்கும். இது மார்ச் 14 1:59:26 என்ற குறிப்பிட்ட நேரத்திலும் கொண்டாடப்படுகிறது.(π = 3.1415926).

பை அண்ணளவு நாள் என்பது பல்வேறு நாட்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இது ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22 இல்  (\pi \, யின் பரவலாக அறிந்த அண்ணளவு \frac{22}{7} ) இது கொண்டாடப்பட்டு வருகின்றது. அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் மார்ச் 14 இல் வருவது குறிப்பிடத்தக்கது.

\pi \,  நாள் முதன்முறையாக 1988இல் கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் நுட்பசாலையான எக்ஸ்புளோடோறியத்தில் கொண்டாடப்பட்டது. அந்நாளில் நுட்பசாலையைச் சுற்றி அலுவலர்களினதும் பொதுமக்களினதும் அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டது. அணிவகுப்பின் முடிவில் பை (Pye) எனப்படும் உணவுப்பண்டம் அனைவருக்கும் பரிமாறப்பட்டு அந்நாள் கொண்டாடப்பட்டது
 

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் Albert Einstein மார்ச் 14 1879 - ஏப்ரல் 18 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன் குவாண்டம் பொறிமுறை புள்ளியியற் பொறிமுறை  (statistical mechanics)  மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும் கோட்பாட்டு இயற்பியலில்  (Theoretical physics)  அவர் செய்த சேவைக்காகவும் 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல் அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999 ல் புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்) 'இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்' என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.
 
நன்றி இணையம்

Saturday, March 10, 2012

கூடு கட்டி முட்டையிடும் அறிய வகை புழு


நிலம் மற்றும் நீரில் வாழக்கூடிய ஒரு அறிய வகை உயிரினத்தை ந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பல ஆண்டுகளில் ஆராய்ச்சிக்கு பிறகு முதல் முறையாக, நிலத்திலும் நீரிலும் வாழும் கால்களற்ற உயிரினத்தை கண்டுபிடித்துள்ளதாக, இந்த ஆய்வுக் குழுவுக்கு தலமையேற்றிருந்த டில்லி பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல் கல்விக்கான மையத்தின் பேராசிரியர் டாக்டர் எஸ் டி பிஜு தெரிவித்துள்ளார்.
வாலில்லாத இந்த உயிரினங்களின் உட்புற மற்றும் வெளிப்புறத் தோற்றங்கள், செஸிலியன் குடும்பத்தைச் சேர்ந்தவை போன்று தோற்றமளிக்கின்றன. ஒன்பது வகையான கால்களற்ற வேறு நில-நீர் வாழ் உயிரினங்களுடன் ஒப்பிட்டே, இவை முற்றிலும் புதியவை என்று தாங்கள் கண்டறிந்ததாக அந்த ஆய்வுக் குழுவினர் கூறியுள்ளனர். 

மரபணுச் சோதனைகளும் இவை முற்றிலும் புதிய உயிரினங்களே என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த உயிரினங்களை முதல் முறையாக பார்க்கும் போது இவை புழுக்களை போன்றே தோன்றும், அவை காடுகளிலுள்ள ஈரப்பதம் மிக்க மணற்பரப்புகளில் வாழ்பவை. 

செஸிலியன்கள் மிகவும் இரகசியமான ஒரு வாழ்க்கை முறையை கொண்டு ஈரமான மணற்பரப்புக்கு கீழே வாழ்பவை என்பதால் அவற்றை கண்டுபிடிப்பது பெரும் சவாலான ஒரு செயல் என டாக்டர் பிஜு தெரிவித்துள்ளார். 

முதுகெலும்புடன் கூடிய ஒரு புதிய உயிரினக் குடும்பத்தை கண்டுபிடிப்பது என்பது மிகவும் அரியது என்று கூறும் விஞ்ஞானிகள், உலகின் 61 நில நீர் வாழ் உயிரினக் குடும்பங்களில் பெரும்பாலானவை 19 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியிலேயே கண்டறியப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளனர். 

இந்த உயிரினம் நிலத்துக்கு கீழே கூடு கட்டி, அதில் முட்டையிட்டு, அதை தனது உடலால் சுற்று வளைத்து இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் வரை அடை காக்கும். அவை புழுவாக உருபெறாமல் நேரடியாக சிறு குஞ்சுகளாகவே வெளிவருவதும் இவற்றின் சிறப்பு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
 
இந்தியாவின் வடகிழக்கு காட்டுப்பகுதிகளில் விரைவான மனித குடியேற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், இவ்வகையான உயிரினங்களை காப்பாற்ற வேண்டியது பெரிய சவாலாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி இணையம்

Friday, March 09, 2012

பூமியைத் தாக்கவிருக்கும் பாரிய சூரியப் புயல்

சூரியப் புயல் என்றால் என்ன ?

சூரியனில் நிகழும் தொடர்ச்சியான அணுக்கருத்தாக்க விளைவுகளின் போது நிகழக் கூடிய அசாதாரண நிகழ்வுகளால் கக்கப்படும் அதிசக்தி வாய்ந்த சக்தி அலைகளும் துணிக்கைகளும் மின்காந்தப் புயலாக மாறி விண்ணில் பரவி பூமி போன்ற கோள்களை நோக்கி வந்து தாக்குகின்றன. இதுவே சூரியப் புயல் எனப்படுகிறது

இதனால் ஏற்படும் விளைவு?

அந்த துணிக்கைகள் மணிக்கு 6,400,000 கிலோமீற்றர்கள் என்ற வேகத்தில் பூமியை தாக்கும் போது பூமியின் காந்தப் புலம் அவற்றிற்கான தடுப்புச் சுவராக நின்று தாங்கிக் கொள்ளும். இருந்தாலும் அந்தத் துணிக்கைகள் கொண்டுள்ள ஏற்றம் காரணமாக அவை இந்த மோதலின் போது பிறப்பிக்கும் சக்தி அலைகள் மனிதனின் இலத்திரனியல் மற்றும் மின் காந்த அலையில் இயக்கப்படும் தொழில்நுட்பங்களை (தகவல்தொடர்பு, செய்மதித் தொலைகாட்சி சேவைகள் போன்றவை உள்ளடங்க) பாதிக்கச் செய்யும்.

இதனால் செய்மதிகள், விமானப் போக்குவரத்துக்கள், மின்னியல் உபகரணங்கள்,மின்சார நிலைகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.



பூமியை மிக விரைவில்  08-03-2012 முதல் 10-03-2012 பாரிய சூர்யப்புயல் தாக்கவிருப்பதால், மின்கட்டமைப்புக்கள், செய்மதிகள் மற்றும் விமானப் பாதைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது சூரியனில் இருந்து கிளம்பி இருக்கு இந்த மின்காந்தப் புயல் கடந்த 5 ஆண்டுகளில் பெரியது என்பதுடன் வலுவானதாக இருக்கிறதாம்

கிறின் வீச் நேரம் 6 தொடக்கம் 10 மணிக்குள் பூமியை இந்த சூரியப் புயல் தாக்கலாம் என அமெரிக்க காலநிலை விசேட நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த வார ஆரம்பத்தில் சூரியனில் இருந்து வெளியான ஒளிக்கீற்று காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவில் உள்ளவர்கள் இன்று இரவு இதனை பார்க்கக்கூடிய வாய்ப்புள்ளதாக பிரித்தானிய ஆய்வு நிலையம் கூறியுள்ளதாக பி.பி.சி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு பூமத்திய ரேகைப் பகுதிகளில் இதனைத் தெளிவாக அவதானிக்க முடியும் எனவும் இதன் விளைவுகள் துருவப் பிரதேசங்களின் மிகவும் அதிகமான பாதிப்பு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளில் விமான போக்குவரத்தை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறுதியாக கனடாவின் க்யூபெக் மாகாணத்தை இதேபோன்ற பயங்கர சூரியப் புயல் 1989ம் ஆண்டு தாக்கியது. தொடர்ந்து 9 நாட்கள் கனடாவே ஸ்தம்பித்து-விட்டது.

http://www.space.com/12581-stunning-photos-solar-storms-flares-sun-weather.html

Tuesday, March 06, 2012

உலகிலேயே மிகப்பெரிய தனித்த மலர்



Rafflesia arnoldii இரஃப்லேசியா அர்னால்டி (ரஃப்லேசியா அர்னால்டி) இரஃப்லேசியா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்  . இது உலகிலேயே மிகப்பெரிய தனித்த மலர்களைத் தரும் தாவரமாகும். இம்மலர் ஒரு மீட்டர் விட்டம் வரையும் 11 கிலோ எடை அளவுக்கும் வளரக்கூடியது. இந்த மலரின் மணம் சிதைவடையும் மீன் நாற்றத்தில் இருக்கும். எனவே இது 'பிண மலர்' (corpse flower) என்று அழைக்கப்படுகிறது. இது பெங்குலு சுமத்ரா தீவு  இந்தோனேசியா  மலேசியா ஆகிய நாடுகளுக்குரிய மிகைச்செறிவினமாகும்.

டைட்டன் ஆரம்  தாலிபோட் பனை போன்றவை மிகப்பெரிய மலர்களைக் கொண்டிருப்பினும் அவை பல மலர்களின் தொகுப்பாகும். மாறாக இரஃப்லேசியா அர்னால்டி முழுமையான ஒரு தனித்த மலராகும்.

. பூமியின் மீது மிக பெரிய தனிப்பட்ட மலர், மற்றும் அளவிற்கு அழிந்துபோகும் சதை ஒரு வலிமையான வாசனையை உற்பத்தி குறிப்பிடத்தக்கது. அது மட்டும் சுமத்ரா தீவு, இந்தோனேஷியா மழைக்காடுகளில் ஏற்படும் ஒரு காணப்படும் செடி.  

Rafflesia arnoldii இரஃப்லேசியா அர்னால்டி இந்தோனேஷியா மூன்று தேசிய மலர்கள் ஒன்றாகும், மற்ற இரண்டு வெள்ளை மல்லிகை மற்றும் நிலவு ஆர்க்கிட் ] இது அதிகாரப்பூர்வமாக ஒரு தேசிய "அரிதான பூ"

விளக்கம்

Rafflesia arnoldii இரஃப்லேசியா அர்னால்டி ஒரு பூ ஒரு சுற்றி மீட்டர் (3 அடி) மற்றும் 11 கிலோகிராம் (24 எல்பி) வரை எடையுள்ள ஒரு விட்டம் வளர்கிறது.  இது Tetrastigma கொடிக்கு, (சிதைவுறாத) ஒரு ஒட்டுண்ணி போல் வாழ்கிறது. மழைக்காடுகள். Rafflesia arnoldii இரஃப்லேசியா அர்னால்டி எந்த காணக்கூடிய இலைகள், தண்டுகள் அல்லது வேர்கள் இல்லை,   அது இனப்பெருக்கம் செய்ய தயாராக இருக்கும் போது அதை மட்டுமே காண முடியும். அவை அழுகும்  சதை வடிவில்  ஒரு  சிவப்பு-பழுப்பு  நிறத்தை கொண்டும் துர்நாற்றத்துடன் காணப்படும்.
ந்த மலரின் மணம் சிதைவடையும் மீன் நாற்றத்தின் வாசனையினால் ஈக்கள்  போன்ற பூச்சிகள் கவர்கிறது இதனால்  மகரந்த சேர்க்கை இலகுவா  நடைபெற எதுவாக உள்ளது.  

 இனப்பெருக்கம்
Rafflesia arnoldii இரஃப்லேசியா அர்னால்டி கண்டறிவது அரிதான மற்றும் மிகவும் கடினமாக உள்ளது.  இது மொட்டுக்களை உருவாக்க பல மாதங்கள் எடுத்து மலர் ஒரு சில நாட்களுக்கு நீடிக்கும் . காடுகளின் மலர் கண்டறிவது குறிப்பாக கடினம்.  இவை  ஆண் மற்றும் பெண் மலர்கள் அருகாமையில்  வளரும் வெற்றிகரமான  மகரந்த சேர்க்கைக்கை நடப்பதற்கு எதுவாக உள்ளது. 
 Rafflesia arnoldii இரஃப்லேசியா அர்னால்டி   ரூட் அல்லது தண்டு வெளியே ஒரு சிறிய மொட்டு  வடிவங்கள் இனப்பெருக்கம்  செய்ய தயாராககும்.  இவை ஒரு வருடத்தில் ஒரு முறையே  இனப்பெருக்கம் செய்யும்.அழுகும் இறைச்சி ஒரு அழுகிய வாசத்தை ஈக்கள் மற்றும்  மகரந்த சேர்க்கை வண்டுகள்  கவர்கிறது. வெற்றிகரமாக  மகரந்த சேர்க்கை நடைபெற ஈக்கள் மற்றும்  வண்டுகள்  ஆண் மற்றும் பெண் தாவரங்கள் இரண்டிலும் மொய்ப்பதால் நடைபெறுகிறது .



Monday, March 05, 2012

பாம்பிற்கு பால் ஊற்றுவது ஏன்?

  • பரோமோன்ஸ்கள் என்றால் என்ன?
பரோமோன்ஸ்கள் உண்டாக்கும் விளைவு உள்ளுணர்வால் ஏற்படுவதாகும். இது உயிரினம் கற்றறிந்து உண்டாவதில்லை. மனிதன் உள்ளிட்ட அனைத்து விலங்கினங்களிலும்  பரோமோன்ஸ்கள் காணப்பட்டாலும் பூச்சியினங்களிலேயே இது மிகப்பரவலாய்க் காணப்படுகிறது.  பரோமோன்ஸ்களைப்  பற்றிய அறிவு வாசனைத் திரவியங்கள் தயாரித்தல் பூச்சிகளைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது.


பாம்பிற்கு பால் ஊற்றுதல் முட்டை வைப்பதன் காரணம் என்ன ? 

உண்மையும் விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விடயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது.பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்?

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்இமனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது .ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர்.

பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும்.

பரோமோன்ஸ் என்பது பொதுவாக ஒரு உயிரினம் தன் இனத்தைச் சேர்ந்த மற்ற உயிரிகளுடன் தொடர்பு கொள்ளும் பொருட்டு சுற்றுப்புறத்தில் சுரக்கும் மணமுடைய வேதிப்பொருள் ஆகும். ஆனால் ஒரு உயிரினத்தின்  பரோமோன்ஸ்   மற்றொரு இன உயிரினத்தில் துலங்கல் உண்டாக்குவதும் அறியப்பட்டுள்ளது.


பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.

இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.


Saturday, March 03, 2012

எந்தப் பறவைக்கும் இல்லாத சக்தி

எந்தப் பறவைக்கும் இல்லாத சக்தி
இந்தப் பறவைக்கு உள்ளது!

இது தன் சாம்பலில் இருந்து உயிர்த்தெழும்!
இது ஏன் சாம்பலாகிறது?

பீனிக்ஸ் பறவை ஒரு லட்சியவாதி!
இதற்கு சூரியன் தான் லட்சியம்!
சூரியனைத் தொடவேண்டும் என்பதே
இந்தப்பறவையின் வாழ்க்கை லட்சியம்!

பீனிக்ஸ் பறவை தன் சிறகுகளை அகல விரித்துப் பறக்கும்!
சூரியனை நோக்கி உயரும்.

ஒரு குறிப்பிட்ட எல்லையில், சூரியனின் அதீத வெப்பத்தால் உடல் கருகி மண்ணில் விழும்!
மீண்டும் உயிர்க்கும்!
மீண்டும் சூரியனை நோக்கிக் கம்பீரமாய்ப் பறக்கும்!

வெற்றி பெற்ற எந்த ஒருவரின் வாழ்க்கையிலும் ஒரு பீனிக்ஸ் பறவை இருக்கிறது!!

அந்த போர்ப் பறவையின் ஆயுள் ரேகையில்
தங்க மயிலின் தன்னம்பிக்கையின் ரேகையும் கூடுகட்டிப் பெருமைப்படுத்துகிறது!!

  • பீனிக்ஸ் பறவை பற்றிய இன்னொரு கருத்து
பீனிக்ஸ் பறவை சாம்பல் ஆவதற்கும் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர் பெறுவதற்கு இன்னுமொரு வியப்பான காரணம் சொல்லப்படுகின்றது.

பீனிக்ஸ் பறவை ஒரு இலட்சிய வாதிப் பறவை எனவும் இதற்கு சூரியனைத் தொட வேண்டும் என்பதே வாழ்க்கை இலட்சியம் எனவும்இஅது சூரியனை நோக்கி பறக்கும் போது குறிப்பிட்ட தூரம் வரை சென்ற பின் சூரியனின் அதீத வெப்பம் தாங்க முடியாமல் உடல் கருகி மண்ணில் விழுந்து மீண்டும் உயிர்த்து தொடர்ந்து தனது பயணத்தை தொடருமாம்.பீனிக்ஸ் பறவை தானாகவே தன்னை வேறு துணை இன்றி உருவாக்கும். இவை பழங்களிலோ பூக்களின் தேனிலோ தங்கி வாழ்வதில்லை. மாறாக மரங்களில் இருந்து வழியும் பாலிலேயே தங்கி வாழ்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

எந்த பறவைக்கும் இல்லாத சக்தி பீனிக்ஸ் பறவைக்கு இருப்பதாக நம்பப்படுவதனாலும் இனிமையான ரசிக்கக்கூடிய இசையை ஒத்த ஒலியில் ஒலி எழுப்பும் வல்லமை உடையதனாலும் முடிவிலி அற்ற பறவை என்பதற்காகவும் குறிப்பாக அனைவராலும் அறியப்பட்ட பறவை பீனிக்ஸ் ஆகும்.
  • ஆபிரிக்கர்களின் நம்பிக்கை
ஆபிரிக்காவில் பீனிக்ஸ் பறவை வாழ்ந்ததாகவும் அவை கற்பனை ஆனவை அல்ல எனவும் நம்பப்படுகிறது. பீனிக்ஸ் பறவைகள் தமது முட்டைகளை நெருப்பில் இருந்து வரும் சாம்பலில் அல்லது காட்டுத் தீயின் பின் அவற்றின் சாம்பலில் இடும் இயல்பை கொண்டதாம்.இதனை கண்ட அன்றைய மக்கள் இப்பறவைகள் நெருப்பில் இருந்து பிறப்பதாக தவறாக புரிந்து கொண்டமையால் அவை பற்றி பல்வேறு கட்டுக் கதைகள் உருவாகியது எனவும் ஒரு கருத்து நிலவுகின்றது.

எவ்வாறு இருப்பினும் இவை உயிர் வாழ்ந்தமைக்கான எவ்வித தடையங்களும் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. எனினும் புரானக் கதைகளிலும் பண்டைய புகழ் பெற்ற ஓவியங்களிலும் இவை முக்கியமான இடத்தை பெற்றுள்ளன.

  • புராணக்கதைகளில் பீனிக்ஸ்
பீனிக்ஸ் பறவை என்பது பாரசீக கிரேக்க உரோம எகிப்திய சீன மற்றும் பினோனிக்கன்களின்(Phoencians ) புராதன கதைகளில் இடம்பெற்ற கற்பனையான ஒரு பறவை(நெருப்பு பறவை)ஆகும்.

புராதன கதைகளின் படி கற்பனை பறவை ஆகிய இதன் தோற்றம் கடும் சிவப்பு நிற உடலையும் தங்க நிறத்திலான வால்ப்பகுதியையும் கொண்டு காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் பீனிக்ஸ் பறவையின் நிறம் குறித்து ஒவ்வொரு புரானக்கதைகளிலும் ஒவ்வொரு விதமாக கூறப்பட்டுள்ளது. பீனிக்ஸ் பறவையானது 500 தொடக்கம் 1000 வருடங்கள் வரையிலான வாழ்க்கை சுழற்ச்சியை கொண்டதாக நம்பப்படுகிறது.

இப் பறவையானது தனது ஆயுள் முடிவதாக உணரும் தறுவாயில் தானாகவே தனக்கென்று ஓர் மரத்தின் சிறு கிளைகளைக் கொண்டு கூடு ஒன்றை அமைத்து அதில் தனக்கு தானே தீ வைத்துக்கொள்ளுமாம்.தீ வைத்துக் கொண்ட பீனிக்ஸ் பறவையும் அதன் கூடும் முற்றாக எரிந்து தீர்ந்ததும் அதில் எஞ்சிய சாம்பலில் இருந்து புதிய பீனிக்ஸ் பறவை அல்லது புதிய பீனிக்ஸ் பறவையின் முட்டை தோன்றுவதாக நம்பப்படுகிறது.

இவ்வாறாக மீண்டும் பிறக்கும் பீனிக்ஸ் பறவை சுயமாகவே தான் வாழும் காலத்தை நிர்ணயித்து புதிய ஒரு வாழ்க்கை சுழற்ச்சியில் வாழுமாம்.

மேலும் சில புராணக் கதைகளின் படி புதிய பீனிக்ஸ் பறவை தனக்கு உயிர் கொடுத்த பீனிக்ஸ் பறவையின் உடலின் சாம்பலை வாசனை உள்ள பொருட்களைக் கொண்டு முட்டை ஒன்றை அமைத்து அதில் சேமித்து எகிப்தில் உள்ள ஹெலியோபோலிஸ் என அழைக்கப்படும் சூரிய கடவுளுக்கு என அமைக்கப்பட்ட கோயிலில் பாதுகாத்து வைக்குமாம்.

இது இவ்வாறு இருக்க இறந்த பறவையின் சாம்பலை அது அதன் சரணாலயமாக கருதும் சூரியனில் புதைக்க தனது இருப்பிடத்தில் இருந்து சூரியனை நோக்கிச் செல்லுவதாகவும் நம்பப்படுகிறது

நன்றி இணையம்

Saturday, January 14, 2012

நிதி உதவி கோரல் - மிகமிக அவசரமானது

காரைதீவு - 5ஐ வதிவிடமாக கொண்ட அ.சந்திரசிறி வயது 33ஐ உடைய இளைஞர் ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் மாற்று சிறுநீரக சிகிச்சையினை மேற்கொள்ள ரூபா. 2இ000இ000.00 தேவைப்படுகின்றது. இதற்கு தங்களால் இயன்ற நிதி உதவியினை வழங்கி உதவுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

வங்கி கணக்கு இல – 223-2-001-3-0015932 -அ.சந்திரசிறி (மக்கள் வங்கி காரைதீவு)






Humble Request for Financial Assistance


One person who live at karaitivu-05 age 33 years , whose two kidneys were fully affected and he needs about Rs.2000 000 is to transplant his two kidneys urgently. Therefore we humbly request you to grant him financial assistance as much as you could.

Thanking You.

For more Detils :-

A.Sandersmalar (Brother of SanthirSri )

Contect Number :- 0772460326