Sunday, March 13, 2011

ஜப்பானின் நிலநடுக்க தாக்கம்: பூமி 4 அங்குலம் நகர்வு


ஜப்பானில் நேற்று இடம்பெற்ற பாரிய நிலநடுக்கம் காரணமாக அதன் பிரதான தீவு தனது அச்சில் இருந்து எட்டு அடி(2.4 மீற்றர்கள்) நகர்ந்துள்ளது. இதை அமெரிக்காவின் பூகற்பவியல் நிபுணர் கென்னத் ஹுட்னட் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் இத்தாலிய பூகற்பவியல் மற்றும் எரிமலைகள் தொடர்பான ஆய்வு மையத்தின் தகவல்களின் பிரகாரம் நேற்றைய நிலநடுக்கம் காரணமாக பூமி அதன் அச்சிலிருந்து பத்து சென்டிமீட்டர்கள்(நான்கு அங்குலம்) நகர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது.

பசுபிக் சமுத்திரத்தின் கீழுள்ள புவித்தட்டில் 400 கிலோ மீற்றர் நீளமும், 160 கிலோ மீற்றர் அகலமும் கொண்ட பூமிப்பரப்பில் பிளவுண்டாகி புவித்தட்டு நகர்ந்த காரணத்தாலேயே நேற்றைய நிலநடுக்கம் மற்றும் சுனாமிப் பேரலை என்பன நிகழ்ந்துள்ளன. அதன் காரணமாக பசுபிக் கடல் பகுதிக்கு கீழான புவித்தட்டு பதினெட்டு மீற்றர்கள் நகர்ந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

ஜப்பானில் நேற்று இடம் பெற்ற சுனாமித் தாக்கமானது கடந்த 2004 ம் ஆண்டின் சுனாமியுடன் ஒத்ததாக இருந்ததுடன், கடந்த 140 வருடங்களில் அங்கு ஏற்பட்ட மோசமான நிலநடுக்கமாக நேற்றைய நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.

குச்சி வடிவில் காணப்படும் உலகின் மிகநீளமான பூச்சி

உலகிலேயே மிக நீளமான பூச்சியொன்றிணைவிஞ்ஞானிகள் Borneo தீவில் கண்டுபிடித்துள்ளனர். இது உலக சாதனைப்புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளதாகவிஞ்ஞானிகள்​ தெரிவித்துள்ளனர்.

இதனை ஒத்ததான பூச்சியொன்றினை பிரித்தானியாவின் இயற்கை வரலாற்று நூதனசாலையும் காண்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இதனை மலேசியாவின் இயற்பியலாளரான Datuk Chan Chew Lunகண்டுபிடித்துள்ளார்

இந்தப்பூச்சியானது காலுடன் சேர்த்து சுமார் 22 அங்குலம் நீளமாகும்.அதன் உடம்பு 14 அங்குலமாகும். இதனைக்கண்டு பிடித்தDatuk Chan Chew Lun அவர்களை கெளரவபடுத்தும் முகமாக அப்பூச்சிக்கு Phobaeticus chani (“Chan’s mega-stick,”)எனப்பெயரிட்டுள்ளனர்

குரோமோசோம் குறைபாடே தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குக் காரணம்

குறைபாடே காரணம் என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். சிலரை தூக்கத்தில் நடக்க வைக்கும் மரபணு சங்கேதக் குறியீட்டை அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். தூக்கத்தின்போது ஒருவரின் இதுபோன்ற நடத்தைக்கு குரோமோசோமில் ஏற்பட்டிருக்கும் பிழையே காரணம் என்று உறுதியாகக் கூறுகிறது அவர்களின் ஆராய்சி முடிவு.

ஒரே குடும்பத்தின் நான்கு தலைமுறையினரை அவர்கள் ஆய்வு செய்திருக்கின்றனர். அப்போது குரோமோசோமின் ஒரு பகுதியில் ஏற்பட்டிருக்கும் குறைபாட்டை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அந்தக் குறைபாடான DNA-வின் ஒரு பகுதி அடுத்த தலைமுறைக்குப் போனால் போதும். அது தூக்கத்தில் நடக்கும் வியாதியை ஏற்படுத்திவிடும். தற்போது, அந்த மரபணு சங்கேதக் குறியீட்டுப் பகுதியை விஞ்ஞானிகள் தனிமைப்படுத்தியிருக்கிறார்கள். அதன்மூலம், தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குத் தீர்வு காண முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள், கிறிஸ்டினா கர்னட் என்பவர் தலைமையில் இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டார்கள். அவர்கள் பரம்பரையாக தூக்கத்தில் நடக்கும் வியாதி பாதிப்பு இருந்தவர்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 12 வயதுச் சிறுமி ஹன்னாவுக்குக் கூட குறிப்பிட்ட வியாதிப் பாதிப்பு இருந்தது. அவள் தூக்கத்திலேயே நடந்து வீட்டை விட்டு வெளியேறிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தாள்.

அந்தக் குடும்பத்தினரின் உமிழ்நீர் மாதிரிகளை ஆராய்ந்ததில், குரோமோசோம் 20-ன் சங்கேதக் குறியீட்டுப் பிழைதான் தூக்கத்தில் நடக்கும் வியாதிக்குக் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. அது, தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வந்திருக்கிறது. பெற்றோருக்கு இந்த ஜீன் இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கும் அது செல்லும் வாய்ப்பு 50 சதவீதம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தங்களின் கண்டுபிடிப்பு தூக்கத்தில் நடக்கும் வியாதியைக் குணப்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கியமான முன்னேற்றம் என்றும் அந்த விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்கள்