Wednesday, February 16, 2011

சுறா மீன் தோல் தீய பாக்டீரியாக்களை அழிக்கும்

அதிக கேடுகளை ஏற்படுத்தும் பக்டீரியா கிருமிகளை சுறா தோல் விரட்டுவது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. கிருமிகள் அதிகம் சேரும் மருத்துவமனைகளில் ஆபரேஷன் தியேட்டர் கருவி உறைகளில் சுறா தோலை பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். கடலில் நீண்ட தூர பயணம் மேற்கொள்ளும் கப்பல்கள், படகுகளின் அடிப்பகுதியில் சிப்பிகள், கடல்வாழ் உயிரினங்கள் அடிக்கடி ஒட்டிக்கொள்ளும்.

சில நேரங்களில் இவை பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். இவற்றை சாப்பிட வரும் உயிரினங்களால் ஆபத்து ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இதை தடுப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சிறு உயிரினங்கள் கூட அதில் ஒட்டாது என்பதால் சுறா தோலையே உறை போல போடலாம் என்று அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தின் பயோ மெடிக்கல் துறை பேராசிரியர் டோனி பிரெனன் கண்டுபிடித்தார்.

பிளாஸ்டிக் ஷீட் போல சுறா தோலை பயன்படுத்தி ஷார்க்லெட் என்ற ஷீட்களையும் அவர் உருவாக்கினார். உயிரினங்களை மட்டுமல்லாமல் பக்டீரியாவையும் விரட்டும் சக்தி, சுறா தோலுக்கு இருப்பது இந்த ஆய்வில் தெரியவந்ததுள்ளது. இதுதொடர்பாக மேலும் ஆராய்ச்சி செய்ய ஷ்ரவந்தி ரெட்டி என்ற இந்திய பேராசிரியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. ஆய்வில் கிடைத்த தகவல் பற்றி ஷ்ரவந்தி கூறியதாவது:

99 சதவீத பக்டீரியாக்களை அழித்துவிட முடியும் என்றாலும் மீதம் ஒரு சதவீத பக்டீரியா மிகப்பெரிய ஆபத்துகளை ஏற்படுத்தக் கூடியது. கம்ப்யூட்டர் கீபோர்டு, பஸ், கூடைகளின் கைப்பிடிகளில் பக்டீரியா கிருமிகள் மறைந்திருக்கும். சுறா தோலில் இவை ஒட்டுவதில்லை. சிப்பிகள், கடல்வாழ் உயிரினங்கள் போல பக்டீரியா கிருமிகள், ஆல்கா ஆகியவற்றையும் ஷார்க்லெட் ஒட்டவிடுவதில்லை.

சாதாரண பிளாஸ்டிக், ஷார்க்லெட் ஆகியவற்றின் மீது தனித்தனியே பாக்டீரியா கிருமிகளை 24 மணி நேரம் வளரச் செய்து ஆய்வு செய்யப்பட்டது. பிளாஸ்டிக்கை ஒரு உறை போல பக்டீரியா கிருமிகள் மூடியிருந்தன. ஷார்க்லெட்டில் சிறிது கூட பக்டீரியா இல்லை. மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மேசை, அறுவை சிகிச்சை கருவிகளின் கைப்பிடி போன்றவற்றை ஷார்க்லெட் உறையால் மூடினால் பக்டீரியா பாதிப்பை தடுக்கலாம்
.

நன்றி :-இணையம்

கண்ணுக்குத் தெரியாத பூஞ்சைக் காளான் ப்ரெட்டில்

அவசரத்திற்கு சட்டென நமக்கு கை கொடுப்பது ப்ரெட் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ப்ரெட் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சி நம்மை திடுக்கிட வைக்கிறது.

ப்ரெட் தயாரித்த தினமே சாப்பிட்டால் ஆபத்து ஏதும் இல்லை தான். ஆனால் ஃப்ரிட்ஜில் பல நாள் வைத்து பாதுகாத்து பின்பு அதை உபயோகிக்கும் போது ப்ரெட்டின் மீது நம் கண்ணுக்குத் தெரியாத பூஞ்சைக் காளான் படிகிறது என்றும் அது சில விஷத்தன்மை கொண்டது என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

இதனை அப்லாடாக்ஸின்..பி.. என்கின்றனர். இது சில பாக்டீரியாக்களுடன் ரசாயன மாற்றம் ஏற்பட்டு நைட்ரேட் பொருளை வெளிப்படுத்தும். இவை மிகுந்த அபாயகரமான புற்று நோய் உண்டாக்கும் ஊக்குவிப்பான்கள்.

எனவே ‌பிர‌ட்டை‌ப் பய‌ன்படு‌த்து‌‌ம் போது ‌‌மிகு‌ந்த எ‌ச்ச‌‌ரி‌க்கை‌த் தேவை.தயாரிக்கப்பட்ட ஓரிரு நாட்களில் சாப்பிட்டுவிடுவது நல்லது.

நன்றி :-இணையம்