Sunday, April 25, 2010

26 ல் எனக்கும் 26.........


இன்று எனது பிறந்த நாள் ஆகும். வாழ்த்துக்கள் தெருவித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

நான் பதிவுலகத்திற்கு வந்தது சிலருடைய பதிவுகளை பார்த்து ஆசைப்பட்டதன் காரணமாகத்தான்!

எனக்கு பதிவுலகதிதிற்கு வந்து எனக்கு தெரியாத சில விசயங்களை தேடி எடுதது அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.அதற்கு ஆதரவு தெரிவித்து உங்களது ஓட்டுகளை அளித்து பின்னுட்டங்கள் முலம் உச்சாகப்படுத்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

26 ம் திகதியில் பிறந்த உலகின் மிகப் பிரபலியமான நபர்களின் பெயர்கள் கீழே

ஜனவரி 26
1921 - அகியோ மொறிடா ஜப்பானியத் தொழிலதிபர் 1977 - வின்ஸ் கார்டர் அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்

பெப்ரவரி 26
1903 - குயிலியோ நாட்டா நோபல் பரிசு பெற்ற இத்தாலியவேதியியலாளர்

மார்ச் 26 1913 - பால் ஏர்டோசு அங்கேரிய கணிதவியலாளர்
1941 - ரிச்சர்ட் டாக்கின்ஸ் படிவளர்ச்சி உயிரியலாளர்


ஏப்ரல் 26

1564 - வில்லியம் சேக்சுபியர் ஆங்கில எழுத்தாளர்

மே 26
1799 - அலெக்சாண்டர் புஷ்கின் ரஷ்யக் கவிஞர் 1884 - மகா வைத்தியநாத ஐயர் கருநாடக இசைக்கலைஞர்

ஜூன் 261824 - வில்லியம் தாம்சன் அயர்லாந்தைச் சேர்ந்த இயற்பியல் அறிஞர்

ஜூலை 26
1933 - எட்மண்ட் ஃவெல்ப்ஸ் பொருளியல் அறிஞர்
1933 - மு. கு. ஜகந்நாதராஜா பன்மொழிப் புலவர் 1939 - ஜோன் ஹவார்ட் ஆஸ்திரேலியாவின் 25வது பிரதமர்

ஆகஸ்டு 261910 - அன்னை தெரேசா அருட்சகோதரி
1883 - திரு. வி. கலியாணசுந்தரனார். தமிழறிஞர்

செப்டம்பர் 261833 - சார்ல்ஸ் பிராட்லா ஆங்கில அரசியல்வாதி 1932 - மன்மோகன் சிங் இந்தியப் பிரதமர்
1981 - செரீனா வில்லியம்ஸ் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை


அக்டோபர் 261947 - இலரி கிளின்டன் ஐக்கிய அமெரிக்காவின் செனட் அவை உறுப்பினர் 1985 அசின் தென்னிந்தியத் திரைப்பட நடிகை 1985 - மான்ட்டே எலிஸ் அமெரிக்கக் கூடைப்பந்தாட்டக்காரர்

நவம்பர் 26
1954 - வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர்

டிசம்பர் 26
1791 - சார்ள்ஸ் பாபேஜ் ஆங்கிலேய கணிதவியலாளர்

Friday, April 23, 2010

உலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள்

உலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள்

முழுக்கணித வரலாற்றிலும் கணக்கியலர்கள் என்று மூன்றே பேரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அவர்களின் விபரம் சுருக்கமாக இங்கே

கற்பிக்கப்படாத மேதை இராமானுசன்

சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22 1887 - ஏப்ரல் 26 1920 உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் கும்பகோணம் சீனிவாசய்யங்கார் தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.

இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (number theory) செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

ஆய்லருடனோ அல்லது கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்டனோ ஏன் எந்தக் கணித வல்லுனருடனோ அவரை ஒப்பிட்டாலும் அவரை 'படிக்காதவர்' என்றே கூறவேண்டும். தன்னால் தானே கற்பித்துக் கொண்ட மேதை அவர். 18 19 வது நூற்றாண்டுகளில் அடுக்கு அடுக்காக உலகை மேவிய கணிதம் யாவும் அவர் வழியில் தட்டுப்படாமலே அவரால் உலகிலுள்ள அத்தனை கணித இயலர்களுக்கும் புதிதாகச் சொல்வதற்கு எவ்வளவோ இருந்தது. இருபதாவது நூற்றாண்டில் ஒரு விண்மீன் போல் அவர் திடீரென்று தோன்றியதும் உலகில் அப்பொழுது மேன்மையானதென்றுப் பெயர் பெற்றிருந்த பல பல்கலைக் கழகங்களில் முறைப்படி அவருடைய ஆராய்ச்சிக் கருத்துக்கள் அரங்கேறியதும் ஒரு சுவையான பரபரப்புக் கணித வரலாறு. குறிப்பாக அது இந்திய தேசத்திற்குச் சிறந்த பெருமையைத் தந்தது.

கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்


கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்ஏப்ரல் 30 1777 – பெப்ரவரி 23 1855 கணித உலகத்திலேயே எல்லாக் காலத்திய கணித இயலர்களுக்கும் மேல்படியில் வைக்கப்படும் சிறந்த கணித வல்லுனர். அவர் கணிதம் இயற்பியல் வானியல் புவிப்பரப்பு ஆகிய நான்கு துறைகளிலும் கணிசமாகப் பங்களித்தவர். கணிதத்தில்இ எண் கோட்பாடு பகுவியல் வகையீட்டு வடிவியல் ஆகிய மூன்றிலும் பற்பல விதங்களில் அடிக்கல் நாட்டி அவர் காலத்திலேயே கோபுரம் எழுப்பினவர். கணிப்புகளில் அபார வல்லமை பொருந்தியவராக இருந்ததால் வானியல் புவிப் பரப்பு எண் கோட்பாடு இம்மூன்றிலும் இன்றியமையாத நீண்ட கணிப்புகளைச் செய்து சாதனை புரிந்தவர்.

சிறு வயதிலேயே கணித மேதை

மூன்று வயதிலேயெ காஸ் தன் தந்தை கூலியாட்களுக்கு சம்பளம் தரும்போது அவர் கணிப்பில் தவறு ஒன்றைக் கண்டுபிடித்தவன்.ஏழாவது வயதில் ஒரு நாள் வகுப்பில் நுழைந்ததுமே எல்லா மாணவர்களையும் பேசாமல் இருக்கச் செய்வதற்காக ஆசிரியர் கொடுத்திருந்த ஒரு கணக்கை நொடியில் முடித்து அவரை அசர வைத்தான் சிறுவன் காஸ். 1இலிருந்து 100 வரையுள்ள முழு எண்களின்கூட்டுத் தொகையைக் கணக்கிடும் கணிப்புதான் அது. காஸுக்கு உடனே தோன்றியது: 1 முதல் 100 வரையில் உள்ள எண்களில் 50 ஜோடிகள் இருக்கின்றன;அதாவது {1 100} {2 99} {3 98} முதலியவை; ஒவ்வொன்றின் கூட்டுத்தொகை 101. ஆக 50 ஜோடிகளின் கூட்டுத்தொகை 5050.

லியோனார்டு ஆய்லர்

இமானுவேல் ஹாண்ட்மன் வரைந்த லியனார்டு ஆய்லர் ஓவியம்
லியோனார்டு ஆய்லர்Leonhard Euler ஏப்ரல் 15 1707 – செப்டம்பர் 18 1783) என்பார் சுவிட்சர்லாந்து நாட்டின் மிகுபுகழ் பெற்ற ஒரு கணிதவியல் மற்றும் அறிவியல் அறிஞர். ஆய்லர் சுவிட்சர்லாந்தில் உள்ள பாசெல் என்னுமிடத்தில் பவுல் ஆய்லர் என்பவருக்கும் மார்கரீட் புரூக்கர் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். இவர் யாவரைக்காட்டிலும் மிக அதிகமான அளவில் கணிதவியல் மற்றும் அறிவியல் ஆய்வுக் கண்டுபிடிப்புகள் செய்த பேரறிஞர். நுண்கணிதம் முதல் கோலக் கோட்பாடு வரையிலான கணிதத்துறையின் பல்வகைப்பட்ட பிரிவுகளில் ஈடுபாடு காட்டினார். இவருடைய கண்டுபிடிப்புகள் 70க்கும் மேலான எண்ணிக்கையில் பெரும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அதனிலும் அவருடைய கடைசி 17 ஆண்டுகள் முழுக்கண்ணும் தெரியாமல் அவர் வாயால் சொல்லி மற்றவர்கள் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகக்கணித வரலாற்றில் கணித இயலாளர்களின் பட்டியலில் ஆய்லருக்கு முதல் ஐந்தாறு இடங்களிலேயே ஓர் இடம் உண்டு. இவர் தற்காலக் கணிதத்துறையில் பயன்படும் பெரும்பாலான கலைச்சொற்களையும் குறியீடுகளையும் அறிமுகப்படுத்தினார். இவர் விசையியல் ஒளியியல் வானியல் ஆகிய துறைகளிலும் பங்களிப்புக்களைச் செய்துள்ளார்.

ஆய்லரின் 250வது பிறந்த நாளையொட்டி சோவியத் ஒன்றியம் 1957 இல் வெளியிட்ட அஞ்சற்தலை

Wednesday, April 21, 2010

கொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள் தொகுப்ர்-02

இது முந்தைய பதிவின் தொடர்ச்சியாகும். முந்தைய பதிவிற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றிகள்

இட்சாக் ரபீன் (Yitzhak Rabin,)

இட்சாக் ரபீன் பிறப்பு மார்ச்1 1922 – இறப்பு நவம்பர் 4 1995) இஸ்ரேலிய அரசியல்வாதியும்இ அதன் இராணுவத் தலைவரும் ஆவார். இவர் இஸ்ரேலின் பிரதமராக இரு தடவைகள் 1974-1977 வரையும் 1992 முதல் 1995 இல் அவர் கொலை செய்யப்படும் வரையில் இருந்தவர். 1993 இல் யாசர் அரபாத்துடன் இவர் கையெழுத்திட்ட அமைதி உடன்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்த இஸ்ரேலிய வலது-சாரி தீவிரவாதியினால் இவர் படுகொலை செய்யப்பட்டார்.1994 ஆம் ஆண்டில் சிமோன் பெரெஸ் யாசர் அரபாத் ஆகியோருடன் இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது.
சேக் முஜிபுர் ரகுமான் (Shekh Mujibur Rôhman)


சேக் முஜிபுர் ரகுமான் (மார்ச் 17 1920 – ஆகஸ்ட் 15 1975) கிழக்கு பாகிஸ்தானின் வங்காள மக்களின் தலைவராக இருந்தவர். வங்காள தேசத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார். அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் வங்காள தேசத்தின் முதலாவது அதிபராகவும் பின்னர் இறக்கும் வரையில் அந்நாட்டின் முதலாவது தலைமை அமைச்சராகவும் இருந்தவர். இவரும் இவரது குடும்பத்தினரும் 1975 இல் படுகொலை செய்யப்பட்டனர்..

ராஜீவ் காந்தி (Rajiv Gandhi)

ராஜீவ் காந்தி (பிறப்பு ஆகஸ்ட் 20 1944 - இறப்பு மே 21 1991)இ இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984 அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர். இவர் 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஜோர்தானின் முதலாம் அப்துல்லா (Sir Abdullah I bin al-Hussein)

(சேர் முதலாம் அப்துல்லா பின் அல்-உசேன் (1882 - ஜூலை 20 1951) ஜோர்தான் நாட்டின் மன்னராக 1949 முதல் 1951 வரை இருந்தவர். இவர் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த டிரான்ஸ்ஜோர்தானின் அமீர் ஆக (1921-1946) இருந்து பின்னர் மே 25 1946 முதல் 1949வரை அதன் மன்னராகவும் இருந்தார். 1949 முதல் இறக்கும் வரை (1951) விடுதலை பெற்ற ஜோர்தானின் மன்னராக இருந்தார். இவர் ஜோர்தான் நாட்டை அமைத்த சிற்பி எனப் போற்றப்படுகிறார். ஜூலை 20 1951 இல் அப்துல்லா ஜெருசலேம் நகரில் உள்ள அல் அக்சா மசூதியில் வெள்ளிக்கிழமை ஆராத்ஹனையில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது 21 அகவையுடைய 'முஸ்தபா ஊஷோ' என்ற பாலஸ்தீன இளைஞன் ஒருவனால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
மரீ பிரான்சுவா சாடி கார்னோ

மரீ பிரான்சுவா சாடி கார்னோ ஆகஸ்ட் 11 1837 – ஜூன் 25 1894) பிரான்சின் அரசியல்வாதியும் மூன்றாம் பிரெஞ்சுக் குடியரசின் நான்காம் அரசுத் தலைவரும் ஆவார். 1887 முதல் 1894 வரையில் படுகொலை செய்யப்படும் வரையில் பிரெஞ்சு அதிபராக இருந்தார்.ஜூன் 24 1894 இல் லியோன் என்ற இடத்தில் ஒரு பொது மேடையில் உரையாற்றும் போது 'சான்டெ கசேரியோ' என்ற இத்தாலிய அரசு எதிர்ப்பாளன் ஒருவனால் குத்திப் படுகாயமடைந்து அன்று நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் இறந்தார்.





Monday, April 19, 2010

கொலை செய்யப்பட்ட உலகத் அரசுத் தலைவர்கள் தொகுப்பு-01

ஆபிரகாம் லிங்க்கன்

ஆபிரகாம் லிங்க்கன் (பிறப்பு பெப்ரவரி 12 1809—இறப்பு ஏப்ரல் 15 1865) ஐக்கிய அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் ஆவார். அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர். 1860ல் மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் ரிப்பப்ளிக்கன் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் குடியரசுச் தலைவராக வெற்றி பெற்றார். 1865 இவர் வாஷிங்ட்டன் டி.சி யில் உள்ள ஃவோர்டு அரங்கில் ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் கொல்லப்பட்டார். அமெரிக்க ஒன்றியத்தின் ஒற்றுமைக்காக உயிர் துறந்து புகழ் எய்தினார்

ஜேம்ஸ் கார்ஃபீல்ட்
ஜேம்ஸ் ஏபிராம் கார்ஃபீல்ட் நவம்பர் 19 1831 – செப்டம்பர் 19 1881) ஐக்கிய அமெரிக்காவின் 20வது குடியரசுத் தலைவர் ஆவார். இவர் படுகொலை செய்யப்பட்டதால் 6 மாதங்கள் வரையிலேயே அதிபர் பதவியில் இருந்தார். குடியரசுக் கட்சியைச் சேர்ந்த இவர் இவரின் அரசியல் எதிராளியான சார்ல்ஸ் கிட்டோ என்பவனால் ஜூலை 2 1881 இல் காலை 9:30 மணிக்கு சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். படுகாயமடைந்த நிலையில் செப்டம்பர் 19 இல் இவர் இறந்தார்

பத்திரிசு லுமும்பா
பத்திரிசு எமெரி லுமும்பா (ஜூலை 2 1925 – ஜனவரி 17 1961) ஆபிரிக்கத் தலைவரும் கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமரும் ஆவார். இவரே பெல்ஜியத்திடம் இருந்து தமது நாட்டை ஜூன் 1960 இல் விடுதலை பெற உதவிய தலைவர். ஆனாலும் 10 வாரங்களின் பின்னர் லுமும்பாவின் அரசு இராணுவப் புரட்சி ஒன்றின் மூலம் கவிழ்க்கப்பட்டது. இதன் போது கைது செய்யப்பட்ட பத்திரிசு லுமும்பா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்
ஆங் சான்
ஜெனரல் ஆங் சான் பெப்ரவரி 13 1915 – ஜூலை 19 1947) என்பவர் பர்மாவின் புரட்சியாளர் தேசியவாதி இராணுவ மேஜர் மற்றும் அரசியல்வாதி ஆவார். ஆங் சான் பர்மாவின் நவீன இராணுவத்தை டிசம்பர் 26 1942 இல் உருவாக்கினார். இவரே பர்மாவின் விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் முதன்மையானவர். ஆனாலும் பர்மா விடுதலை அடைய ஆறு மாதங்களின் முன்னரே படுகொலை செய்யப்பட்டார்

இந்திரா காந்தி
இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். அவர் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். பிறப்பு நவம்பர் 19 1917அலகாபாத் உத்தரப் பிரதேசம்ஜனவரி 19 1966 இல் பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980 ல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984 இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.அக்டோபர் 31 1984 இல் சீக்கியர்களான அவரது சொந்தப் பாதுகாவலர் இருவராலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
முகமது நஜிபுல்லா
நஜிபுல்லா பாஷ்தூ ஆகஸ்ட் 1947 - செப்டம்பர் 27 1996) கம்யூனிச ஆப்கானிஸ்தானின் நான்காவதும் கடைசி அதிபராகவும் இருந்தவர். முகமது ஓமார் தலைமையிலான தலிபான் தீவிரவாதிகள் 1996 இல் காபூல் நகரைக் கைப்பற்றிய போது நஜிபுல்லா மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார். ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பாஷ்டன் இனத்தில் பிறந்தவர். காபூல் பல்கலைக்கழகத்தில் 1975 இல் மருத்துவத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்

Saturday, April 17, 2010

பொது அறிவு (உலகின்)



  1. விண்வெளிக்கு முதன் முதலில் சென்றவர் யூரிகாகரின்.
  2. முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற பெண்மணி வாலண்டினா தெரஸ்கோவா.
  3. ஐ.நா. சபையின் முதல் பெண் தலைவி திருமதி விஜயலட்சுமி.
  4. முதல் பெண் பிரதமர் திருமதி. பண்டார நாயகா (இலங்கை).
  5. முதல் பெண் பைலட் மிஸ்யேல் பிங்கல் ஸ்பீன் (இஸ்ரேல்).
  6. எவரெஸ்ட் சிகரத்தை முதலில் அடைந்தவர் டென்சிங்.
  7. முதன் முதலில் முதன் முதலில் அஞ்சல் அட்டையை வெளியிட்ட நாடு ஆஸ்திரியா.
  8. முதல் அணு சக்தி கப்பலின் பெயர் பெனின்.
  9. முதல் போப் ஆண்டவர் இயேசுவின் சீடரான பீட்டர்.
  10. முதல் கால்பந்து உலகக்கோப்பைப் போட்டி உருகுவே நாட்டில் நடந்தது.
  11. முதன் முதலில் கட்டப்பட்டதும் மிகப் பழமையனதுமான கலங்கரை விளக்கம் எகிப்தில் உள்ளது.
  12. முதன் முதலில் உலகப்படம் வரைந்தவர் –தாலமி.
  13. உலக கொடிகளில் அதிகம் இடம் பெற்றுள்ள நிறம் சிவப்பு.
  14. உல‌கி‌ன் முத‌ல் க‌ண் வ‌ங்‌கி 1944ஆ‌ம் ஆ‌ண்டு ‌நியூயா‌ர்‌‌க்‌கி‌ல் ‌நிறுவ‌ப்ப‌ட்டது.
  15. உலகில் முதல் மருத்துவமனை தோன்றிய தேசம் ரோம்.
  16. சீனா‌வி‌ல்தா‌ன் முத‌ன் முத‌லி‌ல் த‌ங்க ‌மீ‌ன் காண‌ப்ப‌ட்டது.

Tuesday, April 13, 2010

கண்ணிரிலும் தண்ணிரிலும் மூழ்கிய டைட்டானிக் 98 வருடம்

கண்ணிரிலும் தண்ணிரிலும் மூழ்கிய டைட்டானிக் 98 வருடம்

ஆர்எம்எஸ் டைட்டானிக் (RMS Titanic என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப் பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும். டைட்டானிக் தனது முதற் பயணத்தின் போது ஏப்ரல் 14 1912 இல் இரவு 11:40 மணிக்கு வட அட்லாண்ட்டிக் பெருங்கடலில் 220 அடியிலிருந்து 240 அடி நீளமான பனிப்பாறை ஒன்றுடன் மோதியது; உத்தேசமாக12 சதுர அடி துளை (வெடிப்பு) மோதல் காரணத்தினால் உண்டாகின்றது மோதி 2 மணி 40 நிமிடங்களில் ஏப்ரல் 15 1912 இல் முற்றாக மூழ்கியது.
டைட்டானிக் கப்பல் அக்காலத்தில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் அது மூழ்கவே முடியாததெனவும் கருதப்பட்டது. இப்படியான ஒரு கப்பல் மூழ்கியது உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணியது.

மொத்தம் இருந்த 2228 பேருடன் (1343 பயணிகள் 885 மாலுமிகள்)பேரில் 706 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். 1517 பேர் உயிரிழந்தனர்.
டைடானிக் மூழ்கும் வேளையில் இரு பெரிய பகுதிகளாக உடைந்து மூழ்கியது உயிர் தப்பிய பயணிகளால் அவதானிக்கப்பட்டது.

மிகவும் சோகம் நிறைந்த டைடானிக் கப்பல் தொடர்பான முக்கிய தகவல்கள்
  • டைட்டானிக் கப்பலின் பெயர் - RMS Titanic (Royal mail Steamer Titanic) .

  • இது வட அயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது.
    டைடானிக் கப்பல் கட்டுமானம் 1909 மார்ச் 31 ம் திகதி தொடங்கி 1911 மே 31ம் திகதி முடிவுற்றது.
  • 3000 வேலையாட்கள் 3 மில்லியன் தறையாணி (கடாவி) களை பாவித்து கப்பலை கட்டிமுடித்தனர்.
  • டைட்டானிக் தனது முதற் பயணத்தை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயோர்க் நகரை நோக்கி புதன்கிழமை ஏப்ரல் 10 1912 இல் கப்டன் எட்வர்ட் சுமித் தலைமையில் தொடங்கியது.
    கப்பலின் நீளம் 882 அடி (269.1 மீற்றர்).
  • கப்பலின் உயரம் 175 அடி (53.3 மீற்றர்).
  • கப்பலின் மொத்த எடை 46328 தொன்.
    ஒருநாளைக்கு 825 தொன் நிலக்கரியை டைடானிக் இயந்திரம் இயக்க பயன்படுத்தப்பட்டது.
  • டைடானிக் 11 மாடி உயரமான கட்டிடதிற்கு சமமாக ஒப்பிடப்படுகின்றது இந்த கப்பலை வர்ணமூட்ட பெருமளவில் கறுப்பு மையுடன் வெண் வர்ணமும் பாவிக்கப்பட்டதுமுதலாவது நீச்சல் தடாகம் உள்ள கப்பலாக டைடானிக் வடிவமைக்கப்பட்டது.
74 வருடங்களின் பின்
செப்டம்பர் 1 1985 இல் ரொபேர்ட் பலார்ட் தலைமையிலான ஆய்வாளர் குழு ஒன்று கண்டு பிடித்தது. டைடானிக் கப்பல் இப்போது கடல் மட்டத்கிலிருந்து 12000 அடி ஆழத்தில் இருக்கின்றது.டைடானிக் மூழ்கும் வேளையில் இரு பகுதிகளாக உடைந்த பாகங்கள் சமுத்திர அடியில் 1970 அடி தூரத்தில் இருக்க காணப்பட்டது.

டைட்டானிக் (திரைப்படம்)

டைட்டானிக் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் லியானார்டோ டிகாப்ரியோ கேட் வின்ஸ்லெட் மற்றும் பலரும் நடித்துள்ளனர். சொல்லமுடியாத சோக சம்பவத்தினை 194 நிமிடத்தில் தத்ரூபமாக காண்பித்து11 ஆஸ்கார் விருதுகளை 1997 இல் மிகப்பெரிய சாதனை திரைப்படம் டைடானிக் பெற்றது . 200 மில்லியன் டாலர் செலவில் தயாரான டைடானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை பெற்ற சாதனை மட்டுமல்ல வசூலிலும் 1.85 பில்லியன் (1850 மில்லியன்) டாலர் மேலாக இதுவரை குவித்துள்ளது




Monday, April 12, 2010

49 வருடம் நிறைவு விண்வெளியில் யூரி ககாரின் சென்று;

Posters of Gagarin, the first cosmonaut in space, appeared throughout Russia.
Monument of Yuri Gagarin on Cosmonauts Alley in Moscow

யூரி அலெக்சியேவிச் ககாரின் மார்ச் 9 1934 - மார்ச் 27 1968) விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் ஏப்ரல் 12 1961 அன்று சோவியத் ஒன்றியத்தின் வஸ்டொக் - 1 விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.

வாழ்க்கை
.Yuri at age 10
யூரி ககாரின் மாஸ்கோ மாநகருக்கு மேற்கே க்ஸாட்ஸ்க் பகுதியில் உள்ள குளூஷினோ என்னும் இடத்தில் மார்ச் 9 1934 இல் பிறந்தார். இப்பகுதி பின்னர் ககாரின் எனப் பெயரிடப்பட்டது.
He took his first solo flight in 1955
சரடோவ் உயர் தொழிநுட்பக் கல்லூரியில் தொழிற்பயிற்சி பெற்று அங்கு மென் விமான ஓட்டுநராக பகுதிநேரங்களில் பயிற்சி பெற்றார். 1955 இல் ஒரென்பூர்க் விமா ஓட்டுநர் பாடசாலையில் (Orenburg Pilot's School) இல் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்று வெளியேறினார். அங்கு வலென்டினா கொர்யசோவா என்பவரை சந்தித்து 1957 இல் திருமணம் புரிந்தார். அவரது முதல் பணி நோர்வே எல்லையிலுள்ள மூர்மன்ஸ்க் பகுதியில் உள்ள இராணுவ விமானத்தளத்தில் ஆரம்பமானது.

சோவியத் விண்வெளித் திட்டத்தில்

1960 இல் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோவியத் விண்வெளித் திட்டத்தில் இணந்துகொண்ட 20 விண்வெளி வீரர்களில் ஒருவரானார் யூரி. கடும் பயிற்சிக்குப் பின்னர் ககாரின் கெர்மன் டீட்டோவ் ஆகிய இருவரும் விண்வெளிப் பயணத்திற்குத் தெரிவானார்கள். இவர்களில் ககாரின் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீடத்தால் விண்வெளியில் பயணிக்கும் முதல் மனிதராக அனுப்புவதற்காகத் தெரிவு செய்யப்பட்டார்.
விண்வெளிப் பயணம்

ககாரின் ஏப்ரல் 12 1961 இல் வஸ்தோக் 3KA-2 (வஸ்தோக் 1) விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டார். விண்கலத்தில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார். அவரது விண்கலம் 1:48 மணி நேரம் பறந்து பூமியை சுற்றி வந்தது

Sunday, April 11, 2010

அளக்கும் கருவிகள்



  1. இரத்த அழத்தத்தை கணிப்பதற்கு - ஸ்பிக்னோமானோ மீற்றர்.
  2. மின் சக்தியை அளப்பதற்கு - கல்வனோமானி.
  3. பாலின் அடர்த்தியை அளப்பதற்கு - லக்டோ மீற்றர்.
  4. மிக உயர்ந்த வெப்பநிலையை அளப்பதற்கு - தீ மானி.
  5. வளிமண்டல அமுக்கத்தை அளப்பதற்கு - பாரமானி.
  6. காற்றிலுள்ள ஈரத்தன்மையை அளப்பதற்கு - ஈரமானி.
  7. காரின் வேகத்தை அளப்பதற்கு - அனிமோ மீற்றர்.
  8. மலையின் உயரத்தை அளப்பதற்கு - குத்துயரமானி.
  9. மனிதனின் இதயத்துடிப்பை அளப்பதற்கு - கார்பியோ கிராப்.
  10. ஆகாய விமானம் பறக்கும் உயரத்தை அளப்பதற்கு - ஆல்டி மீற்றர்.
  11. ஆகாய விமானத்தின் வேகத்தை அளப்பதற்கு - டேக்கோ மீற்றர்.
  12. தண்ணிருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் கருவி- ஸ்கியூபா

Wednesday, April 07, 2010

பொது அறிவு- 02.

  • கண்கள் இருத்தும் பார்வையற்ற பிராணி - வெளவால்.
  • எந்த தட்ப வெப்பத்திலும் உறையாத தனிமம் - கிலியம்.
  • பனிக்கட்டியில் மேல் வளரும் தாவரம் - க்ரயோபைட்ஸ்.
  • தன் வாழ் நாளில் நீரே அருந்தாத மிருகம் - கங்காரு எலி
  • உலகில் முதல் செயற்கை கோள் - ஸ்புட்னிக்-1.
  • மெரினா கடற்கரையை வடிவமைத்து பெயர் சுட்டியவர்- கிரண்ட்டப்.
  • முதல் முதலில் கேள்விக்குறியைர் பயன்படுத்திய மொழி- இத்தின்.
  • ஈபிள் ரவரை வடிவமைத்தவர் - கஸ்டவ் ஈபில்.
  • உலகிலயே மிக வேகமாக ஒடும் பூச்சி இனம் - கரப்பான் பூச்சி மணிக்கு 4.28 km வேகத்தில்.
  • கைரேகையைப் பயன்படுத்தி குற்றவாளியை கண்டுபிடிக்கும் முறையை கண்டுபிடித்தவர்- எட்வர்ட் ஹென்றி.
  • ஈக்களின் (கொசு) ஆயட் காலம் - 14 நாள்.
  • பப்பாளி பழத்தின் தாயகம் - மெக்சிக்கோ.
  • தக்காளி பழத்தின் தாயகம் - தாய்வாந்து.
  • ஸ்கூட்டரை கண்டுபிடித்தவர் - கிரேலில் பிராட்சா.

Thursday, April 01, 2010

பொது அறிவு 01

இந்திய விழா' நடைபெற்ற நகரம் எது ? லண்டன்

கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது ? ஜப்பான்

நமது சக்தி சாதனங்களில் மிக முக்கியமானது எது ? நிலக்கரி

பார்வை நரம்பு உள்ள இடம் எது ? விழித்திரை

கூலிட்ஜ் குழாயைக் கண்டுபிடித்தவர் யார் ? டங்ஸ்டன்

அயோடின் குறைவினால் ஏற்படும் நோய் எது ? முன் கழுத்துக் கலழை

ஜெர்மன் பேரரசை நிறுவியவர் யார் ? பிஸ்மார்க்

மூலிகை கலந்துவரும் அருவி எது ? குற்றாலம்

ஜப்பான் நாட்டில் உள்ள அதிவேக ரயிலின் பெயர் என்ன ? ஷன் கான் சென்

மனித மூளையை எக்ஸ்-ரே-எடுக்கும் கருவியின் பெயர் என்ன ? என்செஃபலோகிராப்

பண்டைய ரோமானிய சட்டங்களை உருவாக்கியவர்களுள் ஒருவர் யார் ? புரூட்டஸீம்

. மீன்கள் இல்லாத ஆறு எது ? ஜோர்டான் ஆறு

. பெங்களூர் நகரை வடிவமைத்தவர் யார் ? கெம்ப கவுடா

கொலம்பியாவில் தங்க அருங்காட்சியம் எங்கு உள்ளது ? பகோடா