Monday, August 31, 2009

நிச்சயமாய் நீங்கள் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்

நிச்சயமாய் நீங்கள் படிக்க வேண்டிய 10 புத்தகங்கள்

'வீட்டுக்கொரு நூலகம் இருக்க வேண்டியதன் அவசியத்தை நண்பர் விளக்கிக் கொண்டிருந்தேன். என்னுடைய வஞ்சகப் பேச்சில் உத்வேகம் பெற்றவர் 'உடனடியாக நூலகம் வைக்கப் போகிறேன். எந்தப் பேங்கில் லோன் வாங்கலாம்?!' என்றார். அவரை ஆற்றுப்படுத்தி அமர வைப்பதற்குள் போதுமென்றாகி விட்டது. குறைந்த பட்சம் நூறு புத்தகங்களாவது வாங்கப் போகிறேன் என்றார். அதில் குறைந்தது ஆறையாவது நீர் படித்தால் செத்ததுக்குப் பிறகு சொர்க்கத்திற்குப் போய்விடலாம் என்று சொல்லி இருக்கிறேன்.
அதெல்லாம் இருக்கட்டும். ஒருவன் வீட்டில் இருந்தே ஆக வேண்டிய பத்து புத்தகங்களின் பட்டியலை உடனடியாகத் தயார் செய்யுங்கள். ' என்று சொல்லியிருந்தார்.



அந்த நண்பருக்கு ஊக்கமளித்தமைக்காக மட்டுமல்ல... எங்களையும் இரண்டொரு நாள் பழைய நினைவுகளைப் புரட்டிப் போட வைத்தமைக்கு!
மிக மிக யோசனைகள் செய்து இந்தப் பட்டியலை உருவாக்கினேன். நிச்சயமாக ஒரு வாசிப்பாளனாக இது அவரை மாற்றும் என்று சொல்வதற்கில்லை. என்னளவில் இவை என் வாழ்வில் மிக முக்கியப் புத்தகங்களாக நான் கருதுகிறேன்.


இதில் மாக்ஸிம் கார்க்கியின் புத்தகத்தைக் குறிப்பிட நினைத்தேன். பலபேர் படிக்கச் சொல்வதால். ஆனால் நான் இன்னும் படிக்காததால் குறிப்பிடவில்லை.


வாழ்க்கைஇ ஆன்மீகம்இ கவிதைஇ கட்டுரைகள்இ சினிமா என்று வாசிப்புத்தளம் விரிவடைய எல்லாத் துறைகளையும் தேர்ந்தெடுத்து குறிப்பிட்டிருக்கிறேன்.


இனி.. பட்டியல்....


1. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ஸ யூகானந்தர்
ஆன்மிகம் என்பது ஒரு நெடிய பயணம். முடிவிலி. அந்தப் பயணத்தில் உங்களுக்கு இருக்கும் பல கேள்விகளுக்கு இதில் பல கோணங்களில் விடையிருக்கும்... நிச்சயமாக. அதுவும் இடைவெளி விட்டு ஒவ்வொரு முறை படிக்கும்போதும் வெவ்வேறாக உங்களுக்குள் கதவு திறக்கும்!


2. எல்லார்க்கும் அன்புடன் –

கல்யாண்ஜி
வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி அவர்கள் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களின் அற்புதத் தொகுப்பு. சோர்வுறும் போதெல்லாம் எனக்கு டானிக்கைப் போல இதன் வரிகள் இருக்கும். இந்தப் புத்தகத்தை சிபாரிசு செய்வதன் மூலம் இதைப் படித்ததும் கல்யாண்ஜியின் கவிதைத் தொகுப்புகளை நீங்கள் தேடிச் செல்வது நூறுசதம் நடக்கும்!


3. வனவாசம்இமனவாசம் – கவியரசு.கண்ணதாசனின் சுயசரிதை
கண்ணதாசனின் சுயசரிதைஇ வாலியின் சுயசரிதை (நானும் இந்த நூற்றாண்டும்) இரண்டுக்கும் நடந்த ரேஸில் சந்தேகத்துக்கிடமின்றி கவியரசர் வென்றுவிட்டார். காரணம் தமிழக அரசியல் குறித்தும்இ திரைப்படத் துறை குறித்தும் நீங்கள் கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள இது உதவும். இரண்டு பாகங்களையும் ஒன்றென குறிப்பிட்டு விட்டேன்!


4. கோணல் பக்கங்கள் – சாருநிவேதிதா.


சாருவைப் பிடிக்காது என்று சொல்ல எல்லாருக்கும் உரிமை உண்டு. ஆனால் நிச்சயமாக படித்துவிட்டுத்தான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு தவிர்க்க முடியாத எழுத்து சாருவுடையது. அவரது கட்டுரைகளின் தொகுப்பு இந்தக் கோணல்பக்கங்கள். இதிலிருப்பது இப்போதைய சாரு அல்ல. அப்போது அவரது எழுத்தில் இருந்த குறும்பும்இ கோபமும் இப்போது வேறு வடிவம் கொண்டதன் விளைவே பல சர்ச்சைகளுக்கு ஆளாகிறார்! (நேரம்.. நானெல்லாம் சாருவை விமர்சிக்கிறேன். ஸாரி சாரு!!)


5. சத்தியசோதனை – மகாத்மா



இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்பதை எழுதுவதை விட நீங்களாகப் படித்துத் தெரிந்து கொள்வது நலம். காரணம் நிச்சயம் நீங்கள் நூலகம் எல்லாம் வைத்து ஒரு வாசிப்பாளனாகக் காட்டிக் கொள்ளும்போது பல விவாதங்களில் காந்தி அடிபடுவார். (என்ன முரண்! அகிம்சைக்காரர் அடிபடுகிறார்!) படித்து விட்டு விமர்சித்தால் உங்களுக்கு சௌகரியம்... காந்திக்கும்!


6. கதாவிலாசம் – எஸ்.ராமகிருஷ்ணன்


முக்கியமாக எஸ்.ரா-வின் இந்தப் புத்தகத்தைக் குறிப்பிடக் காரணம்இ இது ஒன்றைப் படித்தால் இன்னும் 50 புத்தகங்கள் வாங்க அவரைத் தூண்டும். தமிழில் தவிர்க்கவே முடியாத ஆளுமை கொண்ட 50 எழுத்தாளர்களைக் குறித்து அதில் அவர் எழுதியிருக்கிறார். 50 இல்லையெனினும் 20 எழுத்தாளர்களைத் தேடி ஓடுவது உறுதி.


7. பொன்னியின் செல்வன் –

கல்கி
வரலாற்று எழுத்து அதிலும் ஒரு க்ரைம் நாவலுக்குரிய ஸ்பீடுஇ சஸ்பென்ஸ்இ பாத்திரப் படைப்புகள்...! பொன்னியின் செல்வனைப் படித்து விட்டுஇ சிவகாமியின் சபதத்தை தேடிப் போகாமலா இருப்பீர்கள்?!?
8. வால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல் சாங்கிருத்தியன்
ரொம்ப போரடிக்கிற எழுத்து. ஆனால் நாகரிகங்களைப் பற்றி அறிந்து கொள்ள நிச்சயமாக படிக்க வேண்டிய ஒரு புத்தகம். கி.மு.6000த்திலிருந்து 20ம் நூற்றாண்டு வரை நாகரிகங்களில் என்னென்ன மாற்றம் நிகழ்ந்துள்ளன என அறிய இதிலுள்ள 20 கதைகள் உதவும்.


9. நீங்களும் முதல்வராகலாம் – ரா.கி.

ரங்கராஜன்
அற்புதமான ஒரு மொழிபெயர்ப்புப் புத்தகம். அலுவலகத்தில்இ வீட்டில்இ சமூகத்தில் நீங்கள் எப்படி நடந்து கொண்டால் முன்னுக்கு வரலாம் என்பது ரொம்பப் பிராக்டிகலாக எழுதப்பட்டிருக்கும். படித்தால் நிச்சயம் 'ஓ.. அவன் முன்னேறினது இதே மாதிரிதான்ல' என்று யாரையாவது ஒப்பிட்டுக் கொள்வீர்கள்.


10. உலகசினிமா 1இ2 – செழியன்
வாசிப்பு என்று தளம் விரிவடையும்போது சினிமா குறித்த அறிவு தவிர்க்க முடியாதது. அதற்கு உலகசினிமாக்களைப் பார்க்க வேண்டியது அவசியம். இந்தப் புத்தகத்தைப் படித்து இவற்றிலுள்ளவற்றில் 30மூ படங்களைப் பார்த்தாலே ஓரளவு சினிமாவை ரசிக்க... அதாவது எப்படி ரசிக்க என்பதை அறிந்து கொள்வீர்கள்.


மிகுந்த வலியோடு சுஜாதாவின் கட்டுரைகளையும்இ சிறுகதைகளையும் இதில் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன். காரணம் வாசிக்க ஆரம்பித்தால் நிச்சயம் சுஜாதாவைத் தொடாமல் இருக்க முடியாது.. அதை நானாகச் சொல்லி பத்தில் ஒரு எண்ணிகையைக் குறைத்துக் கொள்வானேன் என்பதால்.
மிக முக்கியமாக ஒன்றைச் சொல்ல வேண்டும்...
நிச்சயமாக 'அட.. இத விட்டுட்டோமே' என்று நினைக்கத்தான் போகிறேன்.. ஏதாவது ஒரு புத்தகத்தைப் பார்த்து. அதேபோல இதிலுள்ள எல்லாமே உங்கள் எல்லாருக்குமே பிடித்ததாய் இருக்காது. ஆனால் எல்லாருக்குமே பத்தில் ஏதோ ஒன்று தவிர்க்க முடியாததாக இருக்குமென்று நம்புகிறேன்.

Friday, August 21, 2009


  • மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய்,தந்தை

  • மிக மிக நல்ல நாள் - இன்று

  • மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு

  • மிகவும் வேண்டியது - பணிவு

  • மிகவும் வேண்டாதது - வெறுப்பு

  • மிகப் பெரிய தேவை - நம்பிக்கை

  • மிகக் கொடிய நோய் - பேராசை

  • மிகவும் சுலபமானது - குற்றம் காணல்

  • கீழ்த்தரமான விடயம் - பொறாமை

  • நம்பக் கூடாதது - வதந்தி

  • ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு

  • செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்

  • செய்யக் கூடியது - உதவி

  • விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்

  • உயர்வுக்கு வழி - உழைப்பு

  • நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு

  • பிரியக் கூடாதது - நட்பு

  • மறக்கக் கூடாதது - நன்றி

  • இவைகளை மனிதர்கள் பின்பற்றினால் இருப்பதை விட சிறப்பாக வாழலாம்

  • Sunday, August 16, 2009


    போர் யுவர் சோயஸ்
    சிகரெட்டை விட வேண்டுமா- 10 வழிகள்!
    நண்பர்களே!!!


    எவ்வளவுதான் மனைவியர் நம் உடல் நலம் பேணினாலும் சில விசயங்களில் நாம் அவர்கள் சொல்வதைக் கேட்பதில்லை. புகை பிடித்தலும் அவற்றில் ஒன்று. நம் உடல் நலத்தில் நாம் அக்கறை கொள்வது நம்மை மட்டுமல்லாது நம் குடும்பத்தையும் காக்கும். இங்கு நான் சொல்லும் வழிகள் எல்லோரும் படித்துப் பயன்பெறத்தான்.

    1.உட்கார்ந்து யோசித்துவிட்டீர்கள், சிகரெட்டை விட்டுவிடலாம் என!!. என்ன செய்ய வேண்டும்? நீங்கள் தனி ஆளாக செய்யவேண்டிய விசயமாக இருந்தாலும் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்!!!நண்பகள், குடும்பத்தினரின் உதவி அவசியம்.. அவர்களின் கேலிகூட உங்களைச் சீண்டி உங்களுக்கு மனத்திடத்தைத் தரக்கூடும்.


    2.ஏன் விடவேண்டும் புகைப்பதை என்பதற்கு சரியான காரணம் தேவை. அப்போதுதான் உங்கள் மனம் அதை ஒத்துக்கொள்ளும். 1. நுரையீரல் புற்று நோய் வருவதிலிருந்து தப்பிக்க. 2. குடும்பத்தைப் பாதுகாக்க- நீண்ட நாள் வாழ, போன்ற ஏதாவது ஒன்றை பிடித்துக்கொள்ளவும்.


    3.சிகரெட்டை நிறுத்த மருந்துகள் வந்துள்ளன. அந்த மருந்துகளை எடுத்துக்கொள்வது மிக நல்லது.இல்லையெனில் உங்கள் உடலானது சிகரெட்டுக்காக ஏங்க ஆரம்பித்துவிடும். அப்புறம் கொள்கையெல்லாம் காற்றில்பறது விடும்.


    4.குடும்ப, அலுவலக,உறவுகள் இப்படி ஏதாவது ஒரு சிக்கலிலிருந்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள சிகரெட் பயன்படுத்துகிறோம். சிகரெட்டை விட்டுவிட்டல் வேறு ஏதாவது ஒன்றை அந்த இடத்தில் வைக்கவேண்டும். சிலர் புளிப்பான மிட்டாய், கடலைமிட்டாய், இசை கேட்டல் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.( பாக்கு,பான்பராக் என்று போய்விடவேண்டாம்!!!)


    5.பெரும்பாலும் மது அருந்தும்போது சிகரெட் பற்ற வைப்பது அதிகம். அதேபோல் உணவு உண்டவுடன் சிகரெட் புகைப்பர். இவற்றைக் கட்டுப்படுத்துவதும் மிக அவசியம்.


    6.புகைப்பதை நினைவுப்படுத்தும் சாம்பல் தட்டு, லைட்டர் போன்றவற்றை அப்புறப்படுத்துங்கள். உங்கள் அறையிலிருந்து அந்த வாடையை துரத்திவிடுங்கள். இதற்கு அறையில் நறுமணம் கமழும் பத்தி போன்றவற்றை உபயோகிக்கலாம்.


    7.சிகரெட் ஞாபகம் வரும்போது என்ன செய்யலாம்? ஏதாவது வேறு வழியில் சிந்தனையைத் திருப்ப வேண்டும். உடற்பயிற்சி செய்யலாம், நாயைக்கூட்டிக்கொண்டு ஒரு வாக்கிங் போகலாம். தோட்டத்தில் புற்களைப் பிடுங்கலாம். இப்படி ஏதாவதொன்றில் திளைத்துவிடுங்கள்.


    8.நிறைய காய்கறிகள், பழங்களை உண்ணவும். இவை சிகரெட்டை நிறுத்த உதவுகிறதாம்.


    9.உங்கள் மருத்துவரை அணுகவும். ஏனென்றால் சிகரெட் விட்டவுடன் ஏற்படும் மனச்சோர்வு மற்றும் பிற பிரச்சினைகளுக்கு மருந்துகளைக்கூட உண்ணவேண்டிவரலாம். ஏனெனில் நிகோடின் நச்சிலிருந்து விடுபட மன உறுதி மட்டுமே பலருக்குப் பயன் தருவதில்லை.


    10.சிகரெட்டை நிறுத்த பல பொருட்கள் தற்போது கிடைக்கின்றன.
    நிகோடின் பாட்ச் (nicotine patch), ஸ்பிரே,உறுஞ்சு குழல், நாக்கினடியில் வைக்கும் மாத்திரை போன்ற பல உள்ளன. இவற்றை மருத்துவரின் ஆலோசனைப்படி உபயோகிக்கலாம்.


    நினைவில் கொள்ளுங்கள்,ஐந்து மில்லியன் மக்கள் ஒவ்வொரு வருடமும் சிகரெட்டால் இறக்கிறார்கள்!!

    Thursday, August 13, 2009

    வாழ்க்கை தத்துவங்கள்

    முயலும் வெற்றி பெறும்,

    ஆமையும் வெற்றி பெறும்,

    முயலாமை வெற்றி பெறாது!'

    `உன் சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு,

    உன் நண்பனுக்கு சுதந்திரம் கொடுக்காதே!'

    `நீ கனவில் கண்ட பெண்ணை விட,

    உன்னை கருவில் கண்ட தாயை நேசி.

    '`கற்காமல் இருப்பதை விட, பிறக்காமல் இருப்பதே மேல்!'

    Monday, August 10, 2009

    அறிவியல் மேதைகள்- மைக்கேல் ஃபாரடே (Michael Faraday)

    அறிவியல் மேதைகள்- மைக்கேல் ஃபாரடே (Michael Faraday)


    அறிவியல் மேதைகள்- மைக்கேல் ஃபாரடே (Michael Faraday)


    மின் இயற்றி அதாவது மின்சார ஜெனரேட்டர் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருந்தால் மின்சாரம் என்பது வெறும் கனவாகவே இருந்திருக்கும். மின்சாரம் இல்லாத உலக வாழ்க்கையை இன்று கற்பனை செய்தும் பார்க்க இயலாது. மேற்கூறிய மின் இயற்றி மற்றும் மின் இயக்கி (Dynamo) ஆகியவற்றைக் கண்டுபிடித்தவர்களுள் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியல் மற்றும் வேதியியல் அறிஞரான மைக்கேல் ஃபாரடே மிகவும் முக்கியமானவராவார். மின்காந்தத் தூண்டல் (Electromagnetic induction) என்ற கோட்பாட்டை 1831 இல் உலகிற்கு வழங்கியவரும் இவரே. அறிவியல் உலகுக்கு இக்கோட்பாட்டினால் விளைந்த பயன்களும், நன்மைகளும் எண்ணிலடங்கா.


    மைக்கேல் ஃபாரடே 1791 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 22 ஆம் நாள் இங்கிலாந்து நாட்டின் நியூயிங்டன் (Newington) என்னும் ஊரில் பிறந்தவர். தந்தை கருமார் தொழில் செய்து வந்தார். ஏழ்மையின் காரணமாக மைக்கேல் தனது 13 ஆவது வயதிலேயே செய்தித்தாள் விற்கும் தொழிலையும், புத்தகக் கட்டமைப்புப் (Book binding) பணியையும் மேற்கோள்ளவேண்டிய நிலைமைக்கு ஆளானார். உலகிற்கு ஒளி வழங்கும் மின்னாற்றலைத் தரும் கருவியைக் கண்டுபிடித்த ஃபாரடே தன் வாழ்நாள் முழுதும் இருளில் உழன்றார். புத்தகக் கட்டமைப்பு வேலையில் ஈடுபட்டிருந்த அவர் ஓய்வு நேரத்தில் அப்புத்தகங்களை வாசிக்கத் தவறவில்லை. பல்வேறு நூல்களைப் படித்தார்; அவற்றுள் பிரித்தானியக் கலைக்களஞ்சியமும் (Encyclopedia Britannica), அறிவியல் வேதியல் நூல்களும் அவரைப் பெரிதும் ஈர்த்தன.


    ராயல் நிறுவனத்தின் இயக்குனராக இருந்த ஹம்ப்ரி டேவி (Humphrey Davy) என்பவரின் சொற்பொழிவை 1812 ஆம் ஆண்டு ஃபாரடே கேட்க நேர்ந்தது. டேவி அவர்கள் பெரிய மின்னணு அகராதி ஒன்றைத் தயாரித்தவர்; பொட்டாசியக் கரைசலில் மின்சாரத்தைச் செலுத்தி அடிப்படைப் பொட்டாசியத் தனிமத்தையும் (base-element potassium) கண்டுபிடித்திருந்தார்; மின் வேதியியல் எதிர்வினை (electrochemical reaction) பற்றியும் அவர் ஆய்வு செய்தவர்; மேலும் சுரங்கத் தொழிலாளர்களுக்குப் பயன்படும் டேவி விளக்கையும் (Davy’s Lamp) அவர் கண்டுபிடித்தவராவார். இவ்வளவு சிறப்பு வாய்ந்த டேவி அவர்களின் சொர்பொழிவைக் கேட்ட ஃபாரடே, தான் கேட்டவற்றையெல்லாம் ஒரு குறிப்பேட்டில் எழுதிவைத்தார். டேவியின் சொற்பொழிவிலிருந்து, தான் திரட்டிய குறிப்புகளை எல்லாம் ஃபாரடே டேவியிடமே காட்டினார். அதைப் பார்த்த டேவி அவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்; மின்சாரம் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் ஃபாரடேவுக்கு இருந்த ஆர்வத்தை அவர் பெரிதும் பாராட்டினார். ராயல் நிறுவனத்தில் (Royal Institute), டேவி அவர்களின் பரிந்துரையால், ஃபாரடேவுக்கு ஆய்வக உதவியாளர் பணி கிடைத்தது. பின்னர் இருவரும் இணைந்து ஐரோப்பா முழுதும் ஆய்வுப் பயணம் மேற்கொண்டனர். பயணம் முடிந்து திரும்பிய பின்னர், கண்ணாடி மற்றும் எஃகுத் துறைகளில் ஃபாரடே ஆய்வு மேற்கொண்டார்; வேதியியல் பகுப்பாய்விலும், கார்பன் குளோரைடுகளைக் கண்டுபிடிக்கும் ஆய்விலும் ஈடுபட்டார். இதன் விளைவாக ஃபாரடே அவர்களால் பென்சீன் (Benzene) கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பெற்றது. தகுந்த அழுத்தத்தைப் பயன்படுத்தி வாயுப் பொருளை நீர்மமாக மாற்றமுடியும் எனவும் 1823 ஆம் ஆண்டில் அவர் நிரூபித்தார்; இதனைக் கண்டு டேவி அவர்கள் பெரிதும் மகிழ்ச்சியுற்றார். மேலும் ராயல் நிறுவனம் இக்கண்டுபிடிப்பைப் பாராட்டி, நிறுவன உறுப்பினர் பதவி (fellow) வழங்கி ஃபாரடேவைக் கெளரவித்தது.


    1820 ஆம் ஆண்டு ஹான்ஸ் ஆர்ஸ்டெட் (Hans Oersted) என்பவர் “ஒரு மின்கடத்தியில் (conductor) மின்சாரத்தைச் செலுத்தினால், அது காந்தப் புலத்தை (magnetic field) உண்டாக்கும்” என்பதைக் கண்டறிந்தார். இதற்கு மாறாகக், காந்தப்புலம் மின்னாற்றலை உற்பத்தி செய்ய இயலுமா என்று அறிய ஃபாரடே முயன்றார். இம்முயற்சியின் விளைவாக, மின்காந்தத் தூண்டல் மற்றும் அதன் விதிகள் (Laws of Electromagnetic Induction) ஆகியன அவரால் கண்டுபிடிக்கப்பட்டன. அடுத்து கம்பிவளையம் (wire loop) ஒன்றினுள் காந்தத்தை நகர்த்தினால், அது மின் உற்பத்திக்கு வழி வகுக்கும் என்பதை ஃபாரடே உலகுக்கு வெளிப்படுத்தினார். மேலும் மின்னூட்டம் பெற்ற கம்பி ஒன்றை காந்தத்திற்கு அருகே தொங்கவிட்டால், அக்கம்பி காந்தத்தைச் சுற்றி, சுழன்று வருவதையும் அவர் செய்து காட்டினார். 1831 ஆம் ஆண்டு ஃபாரடே முதன்முதலாக மின் இயக்கி (dynamo) ஒன்றை உருவாக்கினார். இதே சமயத்தில் ஜோசஃப் ஹென்றி என்பவரும் மின் இயற்றி (electric generator) ஒன்றை உருவாக்கி இருந்தார். எனவே மின் இயக்கி, மின் இயற்றி, மின் மாற்றி (transformer) ஆகிய அனைத்துக் கண்டுபிடிப்புகளுக்கும் காரணமானவர்கள் ஃபாரடேவும், ஹென்றியுமே ஆவர்.


    தற்காலத்திய மின்முலாம் பூசும் (electro-plating) செயல் பற்றிய அனைத்து விவரங்களையும் உலகுக்கு அளித்தவர் ஃபாரடே அவர்களே. 1834 ஆம் ஆண்டில் மின்சாரம் மற்றும் வேதியியல் தனிமத்தின் (element) இணைதிறன் (Valency) ஆகியவற்றிற்கு இடையேயுள்ள உறவு முறையை ஃபாரடே தெளிவுபடுத்தி விளக்கினார். மேலும் காந்த ஈர்ப்புத்தன்மை (Paramagnetism), காந்த விலக்குத்தன்மை (diamagnetism) ஆகியவற்றையும் அவர் கண்டுபிடித்தார். 1861இல் ஃபாரடே ராயல் நிறுவனத்தில் இருந்து ஓய்வு பெற்றார். ஹாம்ப்டன் கோர்ட் (Hampton Court) என்னுமிடத்தில் இங்கிலாந்து நாட்டுப் பேரரசியார் நன்கொடையாக வழங்கிய இல்லத்தில் குடியேறினார். 1867 ஆகஸ்ட் 25 ஆம் நாள் ஃபாரடே இப்பூவுலக வாழ்வை நீத்தார். அவரது ஆய்வுப் பணிகளைப் பாராட்டி மின்சார அறிவியலில் இரண்டு மின் அலகுகள் (electrical units) ஃபாரடே பெயரால் வழங்கப் பெறுகின்றன. ஃபாரடேயின் நட்புக்கு இணையானது அவரது நட்பு மட்டுமே என்று அவரது வழிகாட்டியான டேவி அவர்கள் கூறியுள்ளது மிகவும் பொருத்தமே.