வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்>>> கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு

Wednesday, March 14, 2012

அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் பை நாளும் மார்ச் 14

பை நாள் மற்றும் பை அண்ணளவு நாள் என்பன \pi \, என்னும் புகழ்பெற்ற கணித மாறிலியைக் கொண்டாடும் நாளாகும். ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 14ம் நாள் பை நாளாக கொள்ளப்படுகின்றது. . அமெரிக்க நாட்காட்டியின் படி 3/14 என்பது மார்ச் 14 ஐக் குறிக்கும். இந்த எண் அதாவது 3.14 என்பது அண்ணளவாக  ஐயும் குறிக்கும். இது மார்ச் 14 1:59:26 என்ற குறிப்பிட்ட நேரத்திலும் கொண்டாடப்படுகிறது.(π = 3.1415926).

பை அண்ணளவு நாள் என்பது பல்வேறு நாட்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக இது ஐரோப்பிய நாட்கணக்குகளில் ஜூலை 22 இல்  (\pi \, யின் பரவலாக அறிந்த அண்ணளவு \frac{22}{7} ) இது கொண்டாடப்பட்டு வருகின்றது. அல்பேர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளும் மார்ச் 14 இல் வருவது குறிப்பிடத்தக்கது.

\pi \,  நாள் முதன்முறையாக 1988இல் கலிபோர்னியாவில் உள்ள அறிவியல் நுட்பசாலையான எக்ஸ்புளோடோறியத்தில் கொண்டாடப்பட்டது. அந்நாளில் நுட்பசாலையைச் சுற்றி அலுவலர்களினதும் பொதுமக்களினதும் அணிவகுப்புடன் கொண்டாடப்பட்டது. அணிவகுப்பின் முடிவில் பை (Pye) எனப்படும் உணவுப்பண்டம் அனைவருக்கும் பரிமாறப்பட்டு அந்நாள் கொண்டாடப்பட்டது
 

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் Albert Einstein மார்ச் 14 1879 - ஏப்ரல் 18 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன் குவாண்டம் பொறிமுறை புள்ளியியற் பொறிமுறை  (statistical mechanics)  மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும் கோட்பாட்டு இயற்பியலில்  (Theoretical physics)  அவர் செய்த சேவைக்காகவும் 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டைன் என்ற சொல் அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999 ல் புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட டைம் (இதழ்) 'இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்' என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.
 
நன்றி இணையம்

Saturday, March 10, 2012

கூடு கட்டி முட்டையிடும் அறிய வகை புழு


நிலம் மற்றும் நீரில் வாழக்கூடிய ஒரு அறிய வகை உயிரினத்தை ந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பல ஆண்டுகளில் ஆராய்ச்சிக்கு பிறகு முதல் முறையாக, நிலத்திலும் நீரிலும் வாழும் கால்களற்ற உயிரினத்தை கண்டுபிடித்துள்ளதாக, இந்த ஆய்வுக் குழுவுக்கு தலமையேற்றிருந்த டில்லி பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல் கல்விக்கான மையத்தின் பேராசிரியர் டாக்டர் எஸ் டி பிஜு தெரிவித்துள்ளார்.
வாலில்லாத இந்த உயிரினங்களின் உட்புற மற்றும் வெளிப்புறத் தோற்றங்கள், செஸிலியன் குடும்பத்தைச் சேர்ந்தவை போன்று தோற்றமளிக்கின்றன. ஒன்பது வகையான கால்களற்ற வேறு நில-நீர் வாழ் உயிரினங்களுடன் ஒப்பிட்டே, இவை முற்றிலும் புதியவை என்று தாங்கள் கண்டறிந்ததாக அந்த ஆய்வுக் குழுவினர் கூறியுள்ளனர். 

மரபணுச் சோதனைகளும் இவை முற்றிலும் புதிய உயிரினங்களே என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த உயிரினங்களை முதல் முறையாக பார்க்கும் போது இவை புழுக்களை போன்றே தோன்றும், அவை காடுகளிலுள்ள ஈரப்பதம் மிக்க மணற்பரப்புகளில் வாழ்பவை. 

செஸிலியன்கள் மிகவும் இரகசியமான ஒரு வாழ்க்கை முறையை கொண்டு ஈரமான மணற்பரப்புக்கு கீழே வாழ்பவை என்பதால் அவற்றை கண்டுபிடிப்பது பெரும் சவாலான ஒரு செயல் என டாக்டர் பிஜு தெரிவித்துள்ளார். 

முதுகெலும்புடன் கூடிய ஒரு புதிய உயிரினக் குடும்பத்தை கண்டுபிடிப்பது என்பது மிகவும் அரியது என்று கூறும் விஞ்ஞானிகள், உலகின் 61 நில நீர் வாழ் உயிரினக் குடும்பங்களில் பெரும்பாலானவை 19 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியிலேயே கண்டறியப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளனர். 

இந்த உயிரினம் நிலத்துக்கு கீழே கூடு கட்டி, அதில் முட்டையிட்டு, அதை தனது உடலால் சுற்று வளைத்து இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் வரை அடை காக்கும். அவை புழுவாக உருபெறாமல் நேரடியாக சிறு குஞ்சுகளாகவே வெளிவருவதும் இவற்றின் சிறப்பு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
 
இந்தியாவின் வடகிழக்கு காட்டுப்பகுதிகளில் விரைவான மனித குடியேற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், இவ்வகையான உயிரினங்களை காப்பாற்ற வேண்டியது பெரிய சவாலாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி இணையம்

Friday, March 09, 2012

பூமியைத் தாக்கவிருக்கும் பாரிய சூரியப் புயல்

சூரியப் புயல் என்றால் என்ன ?

சூரியனில் நிகழும் தொடர்ச்சியான அணுக்கருத்தாக்க விளைவுகளின் போது நிகழக் கூடிய அசாதாரண நிகழ்வுகளால் கக்கப்படும் அதிசக்தி வாய்ந்த சக்தி அலைகளும் துணிக்கைகளும் மின்காந்தப் புயலாக மாறி விண்ணில் பரவி பூமி போன்ற கோள்களை நோக்கி வந்து தாக்குகின்றன. இதுவே சூரியப் புயல் எனப்படுகிறது

இதனால் ஏற்படும் விளைவு?

அந்த துணிக்கைகள் மணிக்கு 6,400,000 கிலோமீற்றர்கள் என்ற வேகத்தில் பூமியை தாக்கும் போது பூமியின் காந்தப் புலம் அவற்றிற்கான தடுப்புச் சுவராக நின்று தாங்கிக் கொள்ளும். இருந்தாலும் அந்தத் துணிக்கைகள் கொண்டுள்ள ஏற்றம் காரணமாக அவை இந்த மோதலின் போது பிறப்பிக்கும் சக்தி அலைகள் மனிதனின் இலத்திரனியல் மற்றும் மின் காந்த அலையில் இயக்கப்படும் தொழில்நுட்பங்களை (தகவல்தொடர்பு, செய்மதித் தொலைகாட்சி சேவைகள் போன்றவை உள்ளடங்க) பாதிக்கச் செய்யும்.

இதனால் செய்மதிகள், விமானப் போக்குவரத்துக்கள், மின்னியல் உபகரணங்கள்,மின்சார நிலைகள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.



பூமியை மிக விரைவில்  08-03-2012 முதல் 10-03-2012 பாரிய சூர்யப்புயல் தாக்கவிருப்பதால், மின்கட்டமைப்புக்கள், செய்மதிகள் மற்றும் விமானப் பாதைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது சூரியனில் இருந்து கிளம்பி இருக்கு இந்த மின்காந்தப் புயல் கடந்த 5 ஆண்டுகளில் பெரியது என்பதுடன் வலுவானதாக இருக்கிறதாம்

கிறின் வீச் நேரம் 6 தொடக்கம் 10 மணிக்குள் பூமியை இந்த சூரியப் புயல் தாக்கலாம் என அமெரிக்க காலநிலை விசேட நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த வார ஆரம்பத்தில் சூரியனில் இருந்து வெளியான ஒளிக்கீற்று காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, பிரித்தானியாவில் உள்ளவர்கள் இன்று இரவு இதனை பார்க்கக்கூடிய வாய்ப்புள்ளதாக பிரித்தானிய ஆய்வு நிலையம் கூறியுள்ளதாக பி.பி.சி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு பூமத்திய ரேகைப் பகுதிகளில் இதனைத் தெளிவாக அவதானிக்க முடியும் எனவும் இதன் விளைவுகள் துருவப் பிரதேசங்களின் மிகவும் அதிகமான பாதிப்பு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளில் விமான போக்குவரத்தை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறுதியாக கனடாவின் க்யூபெக் மாகாணத்தை இதேபோன்ற பயங்கர சூரியப் புயல் 1989ம் ஆண்டு தாக்கியது. தொடர்ந்து 9 நாட்கள் கனடாவே ஸ்தம்பித்து-விட்டது.

http://www.space.com/12581-stunning-photos-solar-storms-flares-sun-weather.html

Tuesday, March 06, 2012

உலகிலேயே மிகப்பெரிய தனித்த மலர்



Rafflesia arnoldii இரஃப்லேசியா அர்னால்டி (ரஃப்லேசியா அர்னால்டி) இரஃப்லேசியா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரமாகும்  . இது உலகிலேயே மிகப்பெரிய தனித்த மலர்களைத் தரும் தாவரமாகும். இம்மலர் ஒரு மீட்டர் விட்டம் வரையும் 11 கிலோ எடை அளவுக்கும் வளரக்கூடியது. இந்த மலரின் மணம் சிதைவடையும் மீன் நாற்றத்தில் இருக்கும். எனவே இது 'பிண மலர்' (corpse flower) என்று அழைக்கப்படுகிறது. இது பெங்குலு சுமத்ரா தீவு  இந்தோனேசியா  மலேசியா ஆகிய நாடுகளுக்குரிய மிகைச்செறிவினமாகும்.

டைட்டன் ஆரம்  தாலிபோட் பனை போன்றவை மிகப்பெரிய மலர்களைக் கொண்டிருப்பினும் அவை பல மலர்களின் தொகுப்பாகும். மாறாக இரஃப்லேசியா அர்னால்டி முழுமையான ஒரு தனித்த மலராகும்.

. பூமியின் மீது மிக பெரிய தனிப்பட்ட மலர், மற்றும் அளவிற்கு அழிந்துபோகும் சதை ஒரு வலிமையான வாசனையை உற்பத்தி குறிப்பிடத்தக்கது. அது மட்டும் சுமத்ரா தீவு, இந்தோனேஷியா மழைக்காடுகளில் ஏற்படும் ஒரு காணப்படும் செடி.  

Rafflesia arnoldii இரஃப்லேசியா அர்னால்டி இந்தோனேஷியா மூன்று தேசிய மலர்கள் ஒன்றாகும், மற்ற இரண்டு வெள்ளை மல்லிகை மற்றும் நிலவு ஆர்க்கிட் ] இது அதிகாரப்பூர்வமாக ஒரு தேசிய "அரிதான பூ"

விளக்கம்

Rafflesia arnoldii இரஃப்லேசியா அர்னால்டி ஒரு பூ ஒரு சுற்றி மீட்டர் (3 அடி) மற்றும் 11 கிலோகிராம் (24 எல்பி) வரை எடையுள்ள ஒரு விட்டம் வளர்கிறது.  இது Tetrastigma கொடிக்கு, (சிதைவுறாத) ஒரு ஒட்டுண்ணி போல் வாழ்கிறது. மழைக்காடுகள். Rafflesia arnoldii இரஃப்லேசியா அர்னால்டி எந்த காணக்கூடிய இலைகள், தண்டுகள் அல்லது வேர்கள் இல்லை,   அது இனப்பெருக்கம் செய்ய தயாராக இருக்கும் போது அதை மட்டுமே காண முடியும். அவை அழுகும்  சதை வடிவில்  ஒரு  சிவப்பு-பழுப்பு  நிறத்தை கொண்டும் துர்நாற்றத்துடன் காணப்படும்.
ந்த மலரின் மணம் சிதைவடையும் மீன் நாற்றத்தின் வாசனையினால் ஈக்கள்  போன்ற பூச்சிகள் கவர்கிறது இதனால்  மகரந்த சேர்க்கை இலகுவா  நடைபெற எதுவாக உள்ளது.  

 இனப்பெருக்கம்
Rafflesia arnoldii இரஃப்லேசியா அர்னால்டி கண்டறிவது அரிதான மற்றும் மிகவும் கடினமாக உள்ளது.  இது மொட்டுக்களை உருவாக்க பல மாதங்கள் எடுத்து மலர் ஒரு சில நாட்களுக்கு நீடிக்கும் . காடுகளின் மலர் கண்டறிவது குறிப்பாக கடினம்.  இவை  ஆண் மற்றும் பெண் மலர்கள் அருகாமையில்  வளரும் வெற்றிகரமான  மகரந்த சேர்க்கைக்கை நடப்பதற்கு எதுவாக உள்ளது. 
 Rafflesia arnoldii இரஃப்லேசியா அர்னால்டி   ரூட் அல்லது தண்டு வெளியே ஒரு சிறிய மொட்டு  வடிவங்கள் இனப்பெருக்கம்  செய்ய தயாராககும்.  இவை ஒரு வருடத்தில் ஒரு முறையே  இனப்பெருக்கம் செய்யும்.அழுகும் இறைச்சி ஒரு அழுகிய வாசத்தை ஈக்கள் மற்றும்  மகரந்த சேர்க்கை வண்டுகள்  கவர்கிறது. வெற்றிகரமாக  மகரந்த சேர்க்கை நடைபெற ஈக்கள் மற்றும்  வண்டுகள்  ஆண் மற்றும் பெண் தாவரங்கள் இரண்டிலும் மொய்ப்பதால் நடைபெறுகிறது .