வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்>>> கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு

Saturday, January 14, 2012

நிதி உதவி கோரல் - மிகமிக அவசரமானது

காரைதீவு - 5ஐ வதிவிடமாக கொண்ட அ.சந்திரசிறி வயது 33ஐ உடைய இளைஞர் ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் மாற்று சிறுநீரக சிகிச்சையினை மேற்கொள்ள ரூபா. 2இ000இ000.00 தேவைப்படுகின்றது. இதற்கு தங்களால் இயன்ற நிதி உதவியினை வழங்கி உதவுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

வங்கி கணக்கு இல – 223-2-001-3-0015932 -அ.சந்திரசிறி (மக்கள் வங்கி காரைதீவு)






Humble Request for Financial Assistance


One person who live at karaitivu-05 age 33 years , whose two kidneys were fully affected and he needs about Rs.2000 000 is to transplant his two kidneys urgently. Therefore we humbly request you to grant him financial assistance as much as you could.

Thanking You.

For more Detils :-

A.Sandersmalar (Brother of SanthirSri )

Contect Number :- 0772460326

Sunday, January 08, 2012

Cricket tournament At Karaitivu on 14th of January 2012.



Cricket tournament At Karaitivu on 14th of January 2012.

Wednesday, December 07, 2011

உலகத்தில் உள்ள விலங்கினங்களில் சுவை உணரும் சக்தி அதிகமாய் உள்ள மீன்

கெளுத்தி மீன் அல்லது பூனை மீன் (cat fish) கதிர் துடுப்புடைய மீனினத்தைச் சேர்ந்தவை. இவற்றுக்குச் செதில்கள் கிடையாது. இவற்றின் தொடுமுளைகள் பூனையை நினைவுபடுத்துவது போல உள்ளதால் இவை மேனாட்டில் பூனை மீன்கள் என்று அறியப்படுகின்றன. இவற்றின் வடிவம் மற்றும் அளவு பலவாறாய் வேறுபட்டது.

பெரும்பாலான கெளுத்தி மீன்கள் அடியில் வாழ்பவை. அவற்றின் கனமான தலை எலும்பும் இதற்கொரு காரணமாகும். இவற்றின் தட்டையான தலை பரப்பைத் தோண்ட உதவுகிறது.

பெரும்பாலான நாடுகளில் இவை உணவாக உண்ணப்படுகின்றன. ஐக்கிய அமெரிக்காவில் 1987 ஆம் ஆண்டு முதல் சூன் 25 ஆம் நாள் கெளுத்தி மீன் தினமாகக் கொண்டாடப்படுகிறது. செதில்கள் இல்லாத காரணத்தால் யூதர்கள் மற்றும் ஷியா முஸ்லிம்கள் இவற்றை உண்பதில்லை
மித தட்பவெப்ப வெப்ப வலயங்களில் உள்ள நாடுகளின் ஆறுகளில் கெளிறு மீன்கள் அதிகம் காணப்படுகின்றன. தமது வாழ்க்கையின் பெரும்பகுதியை இந்த மீன்கள் ஆழமான நீர்நிலைகளில் அடித்தளத்தில் கழிக்கின்றன. இவை குப்புறப் படுத்துக் கிடப்பதால் இவற்றின் உடல் மேலிருந்து கீழ் ஓரளவு தட்டையாக இருக்கும். கெளுத்தி மீனின் உடல் மேற்புறம் கருத்தும் அடிப்புறம் வெளுத்தும் இருக்கும். இவற்றின் ஊற்று உறுப்புகளான மீசைகள் ஆழ்நீர் வாழ்வில் பெரும் பங்காற்றுகின்றன. மீசைகள் நன்கு வளர்ச்சியுற்றவை. மாறாக இருளில் அதிக உபயோகமில்லாத கண்கள் வளர்ச்சி குன்றியவை. கெளுத்தி மிகப் பெரும்பான்மையாக இரவில் சஞ்சரிக்கின்றன. பகல் வேளைகளில் அவை குழிகளிலும் கயங்களிலும் ஒளிந்து கொள்ளும். புழுக்கள் போல் நெளியும் இவற்றின் மீசைகள் சிறு மீன்களைக் கவர்ந்து இழுக்கும். சிறு மீன் மீசைகளைப் பிடிக்க முயலும் போது கெளிறு தனது அகன்ற வாயைச் சட்டென்று திறந்து அதைப் பற்றி விழுங்கிவிடும். பெரிய கெளிறுகள் நீர்ப்பறவைகளையும் தாக்கும்.
உலகத்தில் உள்ள விலங்கினங்களில் இந்த கெளுத்தி வகை விளங்குகளுக்குத்தான் சுவை உணரும் சக்தி அதிகமாம் .அதாவது 27 000 சுவை மொட்டுகள் அவைகளின் நாவில் காணப் படுகிறதாம் .

Monday, November 14, 2011

'பறக்கக்கூடிய' தன்மையைப் பெற்ற ஒரே பாலூட்டி


வெளவால் தலைக் கீழாகத் தொங்குவது ஏன்?

வெளவால்களின் இறக்கைகள் 6 அங்குலம் முதல் 6 அடி வரை நீண்டிருக்கும். அவற்றின் கால்களுக்கு போதிய வலிமைக் கிடையாது. அதனால்இ வெளவால்களால் நீண்ட நேரம் நிற்கவோ ந

டக்கவோ முடியாது. மற்ற பறவைகளைப் போல் இவற்றால் பூமியில் இருந்து மேலெழும்பி பறக்க முடியாது. அதற்க்கு அவற்றின் போதிய வளர்ச்சியற்ற கால்களும்இ அதிக கனமான இறக்கைகளும்தான் காரணம். தலைக் கீழாகத் தொங்குவது வெளவால்களுக்கு செளகரியமாக இருக்கிறது. ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவுகிறது. இவ்வாறு தொங்கும் போது வெளவால்களுக்கு அதிக அளவு சக்தி தேவைப்படுவதில்லை. உடனடியாகப் பறப்பதும் எளிதான விஷயமாக உள்ளது.

'பறக்கக்கூடிய' தன்மையைப் பெற்ற ஒரே பாலூட்டி வவ்வால் ஒன்றுதான்

குட்டிப்போட்டு பறக்கக்கூடியத் தன்மையைக்கொண்ட இந்தப்பாலூட்டி பல அதிசியத்தக்க தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. கீழ் காணும் படம் வவ்வால் தன் சிறகை(கையை) விரித்து பறக்கக்கூடிய காட்சி.

மேலும் தலைக்கீழாக தொங்குவதற்கு எந்தவிதமான சக்தி இழப்பும் இவைகளுக்கு ஏற்படுவதில்லை. இதுவும் ஒரு ஆச்சர்யமான நிகழ்வாகும். மனிதர்களைப்பொருத்த வரை இரண்டு நிமிடங்கள் கைகளை ஒரே நிலையில் தூக்கி வைக்க இயலாது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவைகள் தலைகீழாக தொங்கும் போது இவற்றின் உடல் எடையின் காரணமாக பின்புற கால்களின் தசை நார்கள் ஒன்றுடன் ஒன்று தன்னிச்சையாக கோர்த்து இணைந்துக்கொள்வதன் மூலம் இவற்றின் விரல் நகங்கள் தொங்கும் மேற்புறத்தை இறுகப் பற்றிப்பிடித்துக்கொள்ளுகின்றன. இதனால் எந்த விதமான சிரமமுமின்றி இவை உறக்கத்தில் ஈடுபடுகின்றன.

உலகில் உள்ள உயிரினங்களில் ஆண் இனத்தின் மார்பில் பால் சுரக்கும் சம்பவம் தயாக் (Dayak)) வவ்வால்களில் மட்டுமே காணக்கூடிய அதிசயம்

நாம் பொதுவாக அறிந்திருப்பது என்னவென்றால் முட்டையிடுதல் கர்பமடைதல் பாலூட்டுதல் போன்ற பண்புகளை பெண் உயிரினங்கள்தான் பெற்றிருக்கின்றன. 1994 ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் ஓர் உண்மையினை கண்டறிந்தார்கள். மலேசியாவில் வசிக்கக்கூடிய தயாக்(Dayak) பழந்தின்னி வவ்வால்களில் 10 ஆண் வவ்வால்களை ஆராய்ச்சி செய்து ஓரு அதிசியத்தக்க முடிவினை வெளியிட்டார்கள். நம் கற்பனையிலும் உதிக்காத ஒன்று ஆண் வவ்வால்களின் மார்பகங்களில் பால் சுரந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாலூட்டிகளில் ஆண் உயிரினத்தின் மார்பில் பால் சுரக்கக்கூடியது இது ஒன்றாகத்தான் இருக்கும்.

தூரப்பிரதேசத்தின் தட்பவெப்ப நிலைகளை துல்லியமாக அறிந்து 1600 மைல்களைக் கடந்து செல்லும் அதிசய ஆற்றல்

வவ்வால்கள் சராசரியாக மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றலுடையவை. சில வகை வவ்வால்கள் வருடம் முழுதும் ஒரே மரத்தில் தங்கிவிடுகின்றன. ஆனால் சிலவகை வ

வ்வால்கள் உதாரணமாக மெக்ஸிகன் பிரிடெய்ல் வவ்வால்கள் குளிர் காலங்களில் தங்கள் இருப்பிடத்தை மாற்றி வெப்பப் பிரதேசங்களுக்கு பெரும் தூரத்திற்க்கு புலம்பெயர்ந்து செல்லுகின்றன. அமெரிக்காவிலிருந்து 1600 மைல்களைக் கடந்து மெக்ஸிகோவை வந்தடைகின்றன. இவைகள் எப்படி இவ்வளவு தூரப்பிரதேசத்தின் கால தட்ப வெப்பநிலையை துல்லியமாக அறிகின்றன என்பதை விஞ்ஞானிகளால் திட்டவட்டமாகக் கூறமுடியவில்லை. இவைகளின் மூளைப்பகுதியில் பூமியின் காந்த மண்டலங்களை அறியக்கூடிய அமைப்பு எதுவும் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் அபிப்பிராயப்படுகின்றார்கள்.

அடர்ந்த இருளிலும் பார்க்கக்கூடிய கண் அமைப்பு

வவ்வால்கள் பகல் பொழுதை ஒய்விற்கும் இரவு பொழுதை தங்கள் வாழ்க்கைத் தேவைக்கும் பயன்படுத்துகின்றன. இவைகள் அந்திப்பொழுது முதல் வைகறைப்பொழுது வரை மிகச்சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவை. இரவில் இயங்கக்கூடிய சில உயிரினங்களில் வவ்வாலும் ஒன்றாகும். இரவில் நன்குப்பார்க்கக்கூடிய கண் அமைப்பைப் பெற்றிருக்கின்றன.அடர்ந்த இருளிலும் குறைந்க வெளிச்சத்திலும் நன்கு பார்க்கக்கூடிய கண் அமைப்பினை பெற்றுள்ளன.

பொதுவாக வவ்வால்கள் கதைகளிலும் மற்றும் தொலைக்காட்சிகளிலும் தீய சக்திக்கும் சாத்தானிய சக்திகளுக்கும் உதாரணமாகக் கூறப்படுகின்றது. ஆனால் இன்றைய விஞ்ஞானிகள் இவைகளின் அளவற்ற பயன்பாடுகளைப்பற்றி சிலாகித்து கூறுகின்றனர். இவை முக்கியமாக மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கக்கூடிய பூச்சிஇ கொசுஇ வண்டு மற்றும் ஈக்களை தங்கள் முக்கிய உணவாக உட்கொள்கின்றன. மெக்ஸிகோவில் வாழக்கூடிய மஸ்டிப்(
(mastiff) ) வவ்வால்கள் காலனியாக(கூட்டமாக) வாழக்கூடியது. இந்த வவ்வால்களின் ஒரு காலனி(கூட்டம்) ஒரு இரவில் 250 டன் (இரண்டு லச்சத்தி ஐம்பது ஆயிரம் கிலோ) எடையுடைய பூச்சி வண்டு மற்றும் கொசுக்களை தங்கள் உணவாக உண்ணுகின்றன


'எதிரொலியின் மூலம் இரையை பிடிக்கும் அதிசியமான ஆற்றல்' ECHO LOCATION

'ரேடாரின் இயக்கத்தை ஒத்த ஒலி அலை அமைப்பு'
(1) முதல் படம் மாறுப்பட்ட அலை வரிசைகளைக்கொண்ட ஒலியை வவ்வால் அனுப்புகின்றது
(2) இரண்டாவது படம் அதனால் அனுப்பப்பட்ட ஒலிஅலையின் பாதையில் தடங்கள் ஏற்பட்டு அது எதிரொலியாக திரும்பி வருதல்.
(3) ஒலிப்பாதையில் தடங்கள் ஏற்பட்ட இடத்தை நோக்கி துல்லியமாக இரையின் அளவையும் தொலைவையும் அறிய அனுப்பும் ஒலி.
(4) இரையை விரைந்துச்சென்று பிடித்தல்.

இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்புக்களில் ஒன்றான ரேடாரின் இயக்கத்தை ஒத்த ஒரு இயக்கம்தான் வவ்வால் தனது இரையை அடைய மேற்கொள்ளும் உத்தியாகும்.


'சுயம்வரம் நடத்தி ஆண் வவ்வால்களைத் தேர்வு செய்யும் பெண் வவ்வால்களின் வியப்பூட்டும் ஓர் அம்சம்'

'ஆயிரக்கணக்கான குட்டிகளிடையே தன் குட்டியை மிகச்சரியாக அறியக்கூடிய நினைவாற்றல்'

வவ்வால்களின் இனப்பெருக்கத்தை பொறுத்தவரை இனங்களுக்கு இனம் வேறுப்பட்டு காணப்படுகின்றது. பொதுவாக ஒரு முறைக்கு ஒரு குட்டிகளை மட்டும் ஈன்றெடுக்கின்றது. இவைகளின் கர்ப காலம் 40 நாட்கள் முதல் 8 மாதங்கள் வரை இனத்திற்கு இனம் வேறுபட்டுக் காணப்படுகின்றது. ஹாமர் ஹெட் வவ்வால்களின் இனப்பெருக்க முறை மிக வித்தியாசமானதாகும். இவ்வினத்தின் ஆண் வவ்வால்கள் நூற்றுக்கணக்கில் ஒரு மரத்தில் தொங்கிக்கொண்டு இருக்கும். இவைகள் பெண் வவ்வால்களைக் கவர வித்தியாசமான சப்தங்களை எழுப்புகின்றன. இதனால் கவரப்பட்ட பெண் வவ்வால்கள் அங்கு வருகைத்தருகின்றன. ஒவ்வொரு ஆண் வவ்வாலும் தான் தேர்வு செய்யபட முயற்ச்சிகளை மேற்கொள்ளுகின்றன. இருப்பினும் கூட அந்த நூற்றுக்கணக்கான வவ்வால்களில் ஒன்றினை மட்டும் தேர்வு செய்து இனப்பெருக்கத்தில் ஈடுபடும் இந்த நிகழ்ச்சி பழங்கால இளவரசிகள் சுயம்வரம் நடத்தி தங்களுக்கு பிடித்த ஆண்களை தேர்வு செய்த சம்பவத்தைதான் நமக்கு நினைவுபடுத்துகின்றது. இனப்பெருக்கத்தின் மூலம் கர்பமடையும் பெண் வவ்வால் குட்டிகளை ஈன்றெடுக்க இடம் பெயர்ந்து இதைவிட வெப்பமான இடத்தில் சென்று மற்ற கர்பமுள்ள வவ்வால்களுடன் சேர்ந்துக்கொள்ளுகின்றன. ஆயிரக்கணக்கான வவ்வால்களின் குட்டிகளுக்கிடையே இவை தங்கள் குட்டியை மிக சரியாக அடையாலம் கண்டுகொள்ளும் இந்த ஆற்றல் மனித இனம் கூட அடையாத ஒன்றாகும். மருத்துவ மனைகளில் குழந்தை பிறந்தவுடன் அடையால அட்டை கட்டாவிட்டால் எந்த தாயும் தன் குழந்தையை அறிய முடியாது எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.

அழிவின் விளிம்பை நோக்கிச் செல்லும் வவ்வால்கள். ஓர் அதிர்ச்சி தகவல்

வவ்வால்களில் சில வகைகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக உயிர் வாழுகின்றன. இன்றைய சூழ்நிலையில் காடுகள் பெருவாரியாக அழிக்கப்படுவதாலும் உலக அளவில் தற்போது ஏற்பட்டுள்ள (Elnino) பருவநிலைக்கோளாறுகளினால் கோடிக்கணக்கான ஹெக்டேர்களில் ஏறபடும் காட்டுத்தீயினாலும் மிக வேகமாக வவ்வால் இனங்கள் அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றன. மெக்ஸிகோவில் ஏற்ப்பட்ட காட்டுத்தீயின் காரணமாக சில வவ்வால் இனங்கள் 99.99 சதவிகிதம் அழிந்துவிட்டதாக கருதப்படுகின்றது. மனிதர்களினால் வவ்வால்களுக்கு பெரிய அளவில் எந்த பிரச்சனையும் ஏற்படாவிட்டாலும் கூட சில வேளைகளில் உண்பதற்காகவும் சோதனைச்சாலைகளில் ஆராயச்சி செய்வதற்காகவும் இவை வேட்டையாடப்படுகின்றன.

நன்றி இணையம்